india

img

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து சிபிஎம் பொதுக்கூட்டம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் ஏ.சிவாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று திருவண்ணாமலை - விழுப்புரம் சாலை காணை ஒன்றியம் கெடார் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், உயர்க் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு உரையாற்றினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஆர். ராமமூர்த்தி, திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் கவுதம சிகாமணி, செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பெ. கிரி, கண்டமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், திமுக மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், சிபிஐ மாவட்ட செயலாளர் சவுரிராஜன், சிபிஎம் காணை ஒன்றியச் செயலாளர் சிவராமன், காணை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.