மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழனன்று மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை திரிணாமுல் காங்கிரஸ் அரசு இன்னும் கைது செய்யாத நிலையில், குற்றவாளியை விரைவாக கைது செய்யக் கோரியும், படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் சிபிஎம் மேற்குவங்க மாநில செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட கட்சி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.