india

img

தோழர் கே.எம். திவாரி காலமானார் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கல்

புதுதில்லி, டிச. 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், தில்லி மாநிலக் குழுவின் முன்னாள் மாநிலச் செயலாளருமான தோழர் கே.எம். திவாரி செவ்வாயன்று காலை இயற்கை எய்தினார்.

அவருக்கு வயது 70. தோழர் கே.எம். திவாரி மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. “தோழர் கே.எம். திவாரி  தில்லி  காசியாபாத் - சாஹிபாபாத் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு தொழிற்சங்கத் தலைவ ராகச் செயல்பட்டவர்.

படிப்படியாக சிஐடியு-வின் தில்லி மாநில செயலாளராக உயர்ந்து, பல ஆண்டுகள் அதன் பொதுக் கவுன்சிலிலும், செயற்குழுவிலும் செயல்பட்டு வந்தார். 1977-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, தில்லி மாநிலக் குழுவுக்கு 1988-இலும், பின்னர் 1991-இல்  அதன் செயற்குழுவிற்கும், 2018-இல்  மத்தியக் குழுவிற்கும் தேர்வு செய்யப் பட்டார்.

தோழர் கே.எம். திவாரியின் அரசியல் வாழ்வில் அவர் மூன்று மாதங்கள் சிறையிலிருந்தார். மூன்று ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் தலைமறை வாக இருந்தார். தோழர் கே.எம். திவாரியின் நினை வாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு அவருடைய குடும்பத்தினருக்குத் தன் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கல் களையும் தெரிவித்துக்கொள்கிறது” என்று அரசியல் தலைமைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 (ந.நி.)