மக்களவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கி யமான செய்தியாளர்கள் சந்திப்பு இதுதான். மக்களவைத் தேர்த லுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. மக்களவைத் தேர்தலை நடத்த நாங்கள் முழு வீச்சில் தயாராக இருக்கிறோம். தேர்தலை திருவிழா போல் நடத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து வாக்காளர்களாகிய நீங்களும் பங்கேற்றுக் கொள்ளுங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.
96.8 கோடி வாக்காளர்கள்
மேலும் பேசிய அவர், “2024 மக்களவைத் தேர்தலில் வாக்க ளிக்க நாடு முழுவதும் 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள னர். இவர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள், 47.1 கோடி பேர் பெண் கள். மாற்றுத்திறனாளிகள் 88.4 லட் சம் பேர். மாற்று பாலினத்தவர் 48 ஆயிரம் பேர். மொத்த வாக்காளர் களில் 1.82 கோடி பேர் முதன்முறை வாக்காளர்களாவர். 85 வயதைக் கடந்த வாக்காளர்கள் 82 லட்சத்துக் கும் மேல் உள்ளனர். 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர். q
10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்
வாக்காளர்கள் வாக்களிக்க ஏது வாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். எவ்வித வன் முறையும் இல்லாமல் அமைதி யான முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன. மக்களவைத் தேர்தலை நியா யமாக, நேர்மையாக நடத்தப்படும். மக்களவைத் தேர்தல் பணியில் 1.5 கோடி பேர் ஈடுபடுத்தப்படுகின்ற னர். நாடு முழுவதும் 2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படு கிறார்கள். வேட்பாளர்கள் விவ ரங்களை வாக்காளர்கள் அறிந்து கொள்ள செயலி அறிமுகப்படுத் தப்படுகிறது.
மிக உயர்ந்த தரத்தில் தேர்தல்
மிகுந்த உயர்ந்த தரத்தில் தேர் தல் நடத்தப்படும் என உறுதி யளிக்கிறேன். தேர்தல் நேரத்தில் போலி செய்திகளைக் கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப் படும். பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரையில், ட்ரோன் மூலம் மாநில எல்லைகள், சில சர்வதேச எல்லைகளில் கண்காணிக்கப்பு மேற்கொள்ளப்படும். தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப் படும். ஹெலிகாப்டர்கள், தனி விமா னங்களில் கூட தீவிர சோதனை நடத்தப்படும்.
பணத்தை தடுக்க நடவடிக்கை
தேர்தலில் ஆள் பலம், பணப் பலம், வதந்திகள், விதிமுறை மீறல் கள்களைத் தடுக்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும். ஒவ் வொரு மாவட்டத்திலும் 24*7 மணி நேரம் செயல்படும் வகையில் கட் டுப்பாட்டு மையங்கள் அமைக் கப்படும். வாக்குக்கு பணம், பொருட்கள், மது அளித்தால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித் துறை யினர், அமலாக்கத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடு வார்கள்.
வங்கிகளுக்கு கட்டுப்பாடுகள்
வங்கிகள் தங்கள் வாகனங்க ளில் மாலை 6 மணிக்கு மேல் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப் படுகிறது. டிஜிட்டல் பணப் பரி வர்த்தனைகளும் தீவிரமாகக் கண் காணிப்படும். தேர்தல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணியமான பிரச்சாரம் முக்கியம்
அரசியல் கட்சிகள் பொறுப்பு ணர்வோடு பிரச்சாரம் செய்ய வேண்டும். சமூக வலைதளப் பிரச் சாரங்களையும் கவனமாக மேற் கொள்ள வேண்டும். நட்சத்திரப் பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். சாதி, மத ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பிரச்சா ரத்தில் ஈடுபடக் கூடாது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி கள் சிறார்கள், மாற்றுத் திறனாளி களைப் பயன்படுத்தக் கூடாது” என்றார்.
அருணாச்சல், ஆந்திரா, சிக்கிம், ஒடிசா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்
2024 மக்களவை தேர்தலோடு, அரு ணாசல பிரதேசம், ஆந்திர பிர தேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி களையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதன்படி 60 தொகுதிகளைக் கொண்ட அரு ணாசல பிரதேசத்திற்கும், 32 இடங்களைக் கொண்ட சிக்கிம் மாநிலத்திற்கும் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும், 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திர பிர தேசத்திற்கு மே 13-ஆம் தேதியும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறுகின்றன. 147 சட்டப்பேர வைத் தொகுதிகளைக் கொண்ட ஒடிசாவில் மே 13, மே 20 என இரண்டு கட்டங்களாக சட்ட மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறு கிறது.