உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோவில் சிறப்பு ஷூட்டிங்கிற்கு இடையே கடந்த ஜனவரி 22 அன்று பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்ட ராமர் கோவிலை மக்களவை தேர்தல் பிரச்சாரப் பொருளாக எடுத்துக்கொண்ட பாஜக, அயோத்தி நகரை சிங்கப்பூருக்கு இணையாக மாற்றப்போவதாக கூறி ஒன்றிய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் (Swadesh Darshan) திட்டத்தின் கீழ் ரூ.35,080 கோடி செலவில் (தோராயமாக) பணிகளை மேற்கொண்டது. இந்த நலத்திட்டத்தில் ரூ.1,400 கோடியில் புதிதாக விமான நிலையம், ரூ.430 கோடியில் அயோத்தி ரயில்நிலையம் (சீரமைப்பு), ரூ. 624 கோடியில் அயோத்தி ராமர் சாலை (ராமர்பாத்) என ஆடம்பரச் செலவுகள் செய்யப்பட்டன. ஆனால் ரூ.35,080 கோடி அளவில் பிரம்மாண்ட செலவு செய்தும் சாதாரண மழைக்கே ராமர் கோவில், அயோத்தி ரயில்நிலையம், ராமர் சாலை, ஸ்மார்ட்சிட்டி மேம்பாட்டு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
ரூ.1,800 கோடியில் குளமாக மாறிய ராமர் கோவில்
ஜூன் 22 அன்று நள்ளிரவில் பெய்த கனமழையில் ராமர் கோவில் குளமாக மாறியுள்ளது. இதனை ராமர் கோவில் தலைமை அர்ச்சகரே அம்பலப்படுத்தினார். இதுகுறித்து அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில்,”ராமர் கோவிலின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்து வருகிறது. இதனால் கோவில் வளாகத்திற்குள் தண்ணீர் தேங்குகிறது. வளாகத்தில் உள்ள மழைநீரை வெளியேற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதுவே பிரச்சனைக்குக் காரணம்” எனக் கூறினார். இவர் கூறிய பின்பு சமூக வலைத்தளங்க ளில் மழைநீரில் ஒழுகும் ராமர் கோவில் நிலைமை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணை யத்தில் வெளியாயின. ரூ.1,800 கோடியில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் உலக தரம்வாய்ந்த வசதிகள் உள்ளன என்று கூறப்பட்டது. இடி, மின்னல், நிலநடுக்கம், குண்டுவெடிப்பு என எதிலும் ராமர் கோவில் சேதமடை யாது என மோடி அரசு பெருமையடித்தது. ஆனால் ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே ராமர் கோவில் குளமாக மாறியுள்ளது. ரூ.1,800 கோடியில் ராமர் கோவிலுக்காக அப்படி என்ன செலவு செய்யப்பட்டதோ? என நெட்டி சன்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மூழ்கிய அயோத்தி ரயில் நிலையம்
சிறப்பு படப்பிடிப்புடன் ரூ.430 கோடியில் புனர மைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை கடந்த ஆண்டுடிசம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால் இந்த ரயில் நிலையம் 6 மாதங்களுக்கு கூட தாக்குப்பிடிக்காமல் ஜூன் 22 அன்று பெய்த கனமழைக்கு முற்றிலும் மூழ்கியது. தொடக் கத்தில் மழையால் அயோத்தி ரயில் நிலைய சுவர்கள் மட்டுமே சேதமடைந்ததாக பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங்கள் செய்தி வெளி யிட்டன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஊழியர்களின் நேரடி ரிப்போர்ட் மூலம் அயோத்தி ரயில் நிலையமே மழைநீரில் மூழ்கியது அம்பலமானது. ரூ.430 கோடி செலவில் மோடி திறந்து வைத்த இந்த ரயில் நிலையம் சாதாரண மழைக்கே தங்காதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிதக்கும் ராமர் சாலை
அயோத்தி நகரில் இருந்து ராமர் கோவிலுக்கு செல்லும் சாலையின் பெயர் ராம்பாத் ஆகும். சுமார் 14 கிமீ தூரமுள்ள இந்த சாலையில் பல்வேறு ஆடம் பரச் செலவுகள் செய்யப்பட்டுள்ளன. காவி நிறச் சுவர்கள், திரிசூலம் போன்ற கட்அவுட்கள் கட்டப்பட்டன. இந்நிலையில், ராம்பாத் சாலையின் சஹாதத்கஞ்ச் முதல் நயாகாட் வரையிலான 10க்கும் மேற்பட்ட இடங்களில் இடிந்து விழுந்தது, சாலையின் நடுவில் ஆழமான, சுரங்கப்பாதை போன்ற பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஜல்வான்பூர், தொழிற்சாலை பகுதி யான கடோப்பூர், கர்சேவக்புரம் மற்றும் சிவில் லைன்களிலும் பல இடங்களின் சாலைகள் மட்டுமின்றி வடிகால் வசதி இல்லாத தால் அப்பகுதிகள் மழைநீரில் மூழ்கின.ரூ. 624 கோடிபிரம்மாண்ட செலவு செய்தும் அயோத்தி ராமர் சாலை (ராம்பாத்) சிறிய மழைக்கு சேதமடைந்தும், சாலைகள் சுரங்கங்கள் போன்றும் மழை நீரில் மிதக்கிறது.
குடியிருப்புகளும் வெள்ளத்தில்...
ராமர் கோவில் நகர அமைப்பு திட்டத்தால் அயோத்தி நகர குடியிருப்புகள் வெள்ளத் தில் மிதக்கிறது. வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் அயோத்தி நகர குடியிருப்பு வாசிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். மக்கள் வசிக்கும் குடியிருப்பு கள் மட்டுமின்றி பல அரசு அலுவலகங்களிலும் வெள்ளம் புகுந்தது. அயோத்தி மற்றும் பைசாபாத் நகரவாசிகள், சரயு நதிக்கரையில் அமைந்துள்ள பகுதிகளைத் தவிர, இதற்கு முன்பு இவ்வளவு பெரிய அளவில் நீர் தேங்கியதில்லை என்று கூறுகின்றனர்.