india

img

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல்

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு முறைகேடு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில்,  நீட் தேர்வை ரத்து செய்யக்  கோரி நாடு முழுவதும் இடது சாரி மற்றும் காங்கிரஸ் கட்சி யின் மாணவர்கள் அமைப்பு களின் கீழ் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தில் அதிக பயிற்சி தேர்வு  மையங்களைக் கொண்ட கோட்டா நகரத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் முன் னிலையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். எவ்  வித முன்னெச்சரிக்கை உத்த ரவு கூட பிறப்பிக்காமல் ராஜஸ்தான் போலீசார் போராட் டம் நடத்திய மாணவர்கள்  மீது தடியடி நடத்தி யும், தண்ணீரை பீய்ச்சி  அடித்தும் விரட்டியடித்த னர். இதில் சில மாணவர்கள் காயமடைந்த நிலையில்,  இதற்கு மாணவ அமைப்பு கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. தொடர்ந்து மாணவர்கள் மீதான தாக்கு தலை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த மாணவர்கள் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

மே.வங்கத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் கொடும்பாவி எரிப்பு

மேற்குவங்க மாநில சத்ரா பரி ஷத்தில் இடதுசாரி - இளை ஞர் காங்கிரஸ் அமைப்பினர் முன்னி லையில் மாணவர்கள் பேரணியாக  போராட்டம் நடத்தினர். இந்த போராட் டத்தில் ஆயிரக்கணக்கான மாண வர்கள் பங்கேற்ற நிலையில், இந்த  பேரணியில் நீட் தேர்வு மற்றும் மோடி  அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதா னின் கொடும்பாவியை எரித்து தங்  களை எதிர்ப்பை வெளிப்படுத்தி னர்.