india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக ஆளும் 
மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்
ராணுவ அதிகாரிகளைத்  தாக்கி தோழி பாலியல் பலாத்காரம்

பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத் தில் மோவ் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் தங்களது இரு தோழிகளுடன், மண்டலேஸ்வர் பகுதி யில் சுற்றுலா சென்றனர். அப்போது இரு வர் மலை உச்சிக்கு செல்ல, இருவர் காரி லேயே இருந்தனர். புதனன்று அதிகாலை 2  மணியளவில், அடையாளம் தெரியாத 7  பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது பெண் தோழியை சராமாரியாக தாக்கினர். மலை  உச்சிக்குச் சென்றிருந்த மற்றொரு ராணுவ அதிகாரியும் தோழியும் தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்தனர். அப்பொழுது காரில் இருந்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது தோழியைத் தாக்கிய கும்பல் அவர்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதி களாக வைத்துக் கொண்டு, மலையில் இருந்து இறங்கிவந்த அதிகாரியிடம் ரூ.10  லட்சம் கொண்டு வருமாறு எச்சரித்துள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராணுவ அதிகாரி, மோவ்வில் உள்ள தனது உயரதிகாரிக்கு தகவல் தெரி வித்து, போலீசாருக்குக் தகவல் கொடுக்க செய்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் குழுவொன்று அந்த பகுதிக்கு அனுப்பப் பட்டது. அதற்குள் தாக்குதல் நடத்தி யவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந் தனர்.

தாக்குதலுக்கு உள்ளான அந்த ராணுவ அதிகாரியும், அவரது தோழியும் மோவ் சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ராணுவ அதிகாரி களை தாக்கி தோழியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

ராஞ்சி
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் 
12 தொகுதி கேட்டு பாஜகவிற்கு நிதிஷ் குமார் நெருக்கடி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற வுள்ள ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்த லில் தனித்து போட்டியிடுவதாக பாஜக வின் நெருங்கிய கூட்டாளியான நிதிஷ்  குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி அறிவித்துள்ளது. ஜார்க்கண்டில் ஜேடியு கட்சிக்கு அவ்வளவாக செல்வா க்கு இல்லை என்றாலும், பீகார் எல்லைப் பகுதியில் அக்கட்சிக்கு கொஞ்சம் வாக்கு வாங்கி உள்ளது. கடந்த காலங்களில் பாஜக கூட்டணியுடன் எம்எல்ஏக்களை யும், அமைச்சர்களையும் பெற்றிருந்த ஜேடியு, நீண்ட காலத்திற்கு பிறகு ஜார்க் கண்ட் சட்டமன்ற தேர்தலில் இறங்கியுள்ளது.

தனித்து போட்டியிட்டால் வாக்குகள்  பிரியும் என்பதை கணக்கில் வைத்து  ஜேடியு-வை கூட்டணிக்கு வருமாறு பாஜக அழைத்தது. இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜேடியு-வின் ஜார்க்கண்ட் பிரிவு,”பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் இந்த முறை ஜார்க்கண்ட் தேர்தலில் ஜேடியு போட்டியிட முடிவு செய்துள்ளது”என அறிவிப்பு வெளியிட்டது. மேலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 12 தொகுதிகள் கேட்டது ஜேடியு. கூட்டணிக் கட்சிகளுக்கு 3 தொகுதிக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை என பாஜக தெரி வித்த நிலையில், ஜேடியு 12 தொகுதி களை கேட்டு வருவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

ஜேடியு - ஜார்க்கண்ட் 

ஜார்க்கண்ட் மாநிலம் பீகாரில் இருந்து  உருவாக்கப்பட்ட பின்னர் 2005இல் முதலா வது சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஜேடியு கட்சி 18 தொகு திகளில் போட்டியிட்டு 6 இடங்களில் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் ஜேடியுவுக்கு இடம்  தரப்பட்டது. ஆனால் 2009 மற்றும் 2014இல் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டி யிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. இந்நிலையில், 10 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது.