90 தொகுதிகளை கொண்ட ஜம்மு- காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு 3 கட்டமாக (செப்.,18, செப்., 25, அக்., 1) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் - மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் - தேசிய சிறுத்தைகள் கட்சி (பேந்தர்) உள் ளிட்ட கட்சிகள் “இந்தியா” கூட்டணியாக களமிறங்கி 90 தொகுதிகளுக்கான கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. ஆனால் மொத்த முள்ள 90 தொகுதிகளில் 85 தொகுதிகளில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. அதாவது தேசிய மாநாட்டுக் கட்சி 52 தொகுதிக ளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சிறுத்தைகள் கட்சி தலா 1 தொகுதியி லும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 5 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.