india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக ஆளும் குஜராத்தின் போர்பந்தர் அருகே சிறிய படகு ஒன்றிலிருந்து சுமார்  3,300 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கிலோ சார்ஸின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.7 கோடி என்ற நிலையில், 3,089  கிலோ சார்ஸ், 158 கிலோ மெத்தாம் பேட்டமின்  மற்றும் 25 கிலோ மார்பின் கைப்பற்றப்பட்டுள்ள தாக இந்திய கடற்படை தகவல் அளித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பிடார் மாவட்டத்தில் செவ்வா யன்று அதிகாலை கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர்  கவலைக்கிடமாக உள்ளனர் என தகவல் வெளியாகி யுள்ளது.

மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்ட ளையை (MAEF) மூட சிறு பான்மை விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசுக்கும், மராத்தா ஆர்வலர் மனோஜ் ஜாரங்கேவிற்கும் மீண்  டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர் பாக இறுதி முடிவு எடுக்க மனோஜ் ஜாரங்கே ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ரயில்வே நிலம் தொடர்பான வழக்கில் ராஷ்டி ரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும் 2 மகள்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது தில்லி நீதிமன்றம்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலை யில் அசாம் மாநில காங்கிரஸ் செயல் தலை வர் ராணா கோஸ்வாமி தனது பதவியை ராஜி னாமா செய்துள்ளார்.

மகாதேவ் ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்  கில் தில்லி, மும்பை, மேற்கு வங்கம் உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களின் 15 இடங்களில் அம லாக்கத்துறையினர் செவ்வாயன்று சோதனை நடத்தினர். 

2024இல் இந்திய நிறுவனங்கள் சராசரியாக 10 சதவீத சம்பள உயர்வை வழங்கும் என மெர்ச்சர்  நிறுவனம் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளி யிட்டுள்ளது.

பீகாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் 3 பேர் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளும்  கட்சி உறுப்பினர்களுடன் சென்று அமர்ந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 3 பேரும் பாஜக விற்கு தாவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்
கடன் செயலி குண்டர்கள் மிரட்டல்
மாணவர் தற்கொலை

தெலுங்கானா தலைநகர் ஹைதரா பாத்தில் பிடெக் மூன்றா மாண்டு பயிலும் 20 வயது மாண வர் ஆன்லைன் செயலி மூலம் கடன் (லோன்) வாங்கியுள்ளார். இரண்டு மாதம்  தவணை தொகையை சரியாக செலுத்த  முடியாததால் ஆன்லைன் கடன் செயலி  நிர்வாகிகளிடம் கூடுதல் கால அவகாசம்  கேட்டுள்ளார். ஆனால் கடன் செயலி நிர்  வாகிகள் பணத்தை உடனடியாக செலுத்த  வேண்டும் எனக் கூறி மாணவரை துன்பு றுத்தலுடன் தொடர்ச்சியாக மிரட்டி உள்ள னர். இதனால் பயந்தும், மனமுடைந்தும் மாணவர் திங்களன்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்  கொலை செய்து கொண்டார். மாணவரின்  பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடன்  செயலி நிர்வாகிகள் தொடர்பாக போலீ சார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடன் செயலி தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு புகார்கள் வந்தாலும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கா மல் மோடி அரசு அலட்சியமாக இருக்கும்  நிலையில், தற்போது கடன் செயலி குண்  டர்களின் மிரட்டலால் 20 வயது மாணவ ரின் உயிர் பறிபோயுள்ளது.