மும்பை மகாராஷ்டிரா சட்டமன்ற தேர் தலில் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் (பாஜக - 132, சிவசேனா (ஷிண்டே) - 57, தேசியவாத காங்கிரஸ் (அஜித்) - 41)) வென்று ஆட்சியை கைப்பற்றி யது. ஆனாலும் முதல்வர், துணை முதல்வர் பதவி தொடர்பாக பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இறுதியில் பாஜகவின் மிரட்ட லுக்கு பணிந்த சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பத வியை விட்டுக்கொடுக்க, கடந்த வாரம் பிரதமர் மோடி முன்னிலை யில் முதல்வராக பாஜக தலை வர் தேவேந்திர பட்னாவிஸ் பொ றுப்பேற்றார். துணை முதல்வர்க ளாக ஏக்நாத் ஷிண்டே (முதல் துணை முதல்வர்) மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் (இரண்டாவது துணை முதல்வர்) பொறுப்பேற்றனர்.
இலாகா சண்டை
இந்நிலையில், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவி டம்,”57 இடங்களை வென்றுள்ள தனது கட்சிக்கு 11 முதல் 13 அமைச்சர் பதவிகளை தரவேண் டும். குறிப்பாக உள்துறை, வரு வாய், பொதுப்பணி, நகர்ப்புற மேம் பாடு உள்ளிட்ட முக்கிய துறைகள் எங்களுக்கு ஒதுக்க வேண்டும். முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால், இலாகா ஒதுக்கீட் டில் நாங்கள் கேட்கும் துறைகளை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இட மில்லை” என ஏக்நாத் ஷிண்டே பிடி வாதமாக கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
உள்துறையை விட்டுக்கொடுக்க மாட்டோம் : பட்னாவிஸ்
ஒருமாநிலத்தில் முதல்வர் பத வியைப் போன்று உள்துறை யும் அதிகாரமிக்க பதவியாகும். இதனால் உள்துறை பொறுப்பை பிடிக்க முதல்வர் பட்னாவிஸுக் கும், ஏக்நாத் ஷிண்டேவுக்கும் போட்டி நீடித்து வருகிறது. உள் துறையை விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என பட்னாவிஸ் தரப்பு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2022இல் மகாராஷ்டிராவில் சிவ சேனாவை உடைத்து, எம்விஏ கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது பாஜக. ஆட்சி கவிழ்ப்பு மூலம், பொறுப்பேற்ற மகாயுதி கூட்டணி ஆட்சியில் பட்னாவிஸ் தான் உள்துறையை கவனித்து வந்தார். அதனால் இம்முறையும் நானே உள்துறையை கவனிப்பேன் என அடம்பிடித்து வருகிறார்.
ஆனால் கடந்த முறை நான் முதல்வராக இருந்த பொழுது துணை முதல்வராக இருந்த பட்னா விஸ் உள்துறை இலாகாவை கவ னித்தது போல, இந்த முறை எனக்கு உள்துறை இலாகா வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
எனக்கு நிதியமைச்சர் : அஜித் பவார்
ஏற்கெனவே உள்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்கள் தொடர்பாக பட்னாவிஸ் - ஷிண்டே இடையே மோதல் நீடித்து வரு கிறது. இத்தகைய சூழலில் துணை முதல்வர் அஜித் பவார் தனக்கு நிதியமைச்சர் பதவி வேண்டும் என மகாயுதி கூட்டணிக்குள் மோ தலை மேலும் தீவிரப்படுத்தியுள் ளார். அஜித் பவார் இரண்டாம் துணை முதல்வராக இருக்கிறார். அதனால் கண்டிப்பாக நிதிய மைச்சர் இலாகா வேண்டும் என அஜித் பவார் தேசியவாத காங்கி ரஸ் கட்சி பாஜகவிடம் வலியுறுத்தி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
முதல்வர் பதவி பிரச்சனை முடிந்து இலாகா ஒதுக்கீடு மூலம்மகாராஷ்டிரா மகாயுதி கூட்டணிக்குள் மீண்டும் மோதல் தீவிரமடைந்து வருகிறது.
ஷிண்டேவை கண்டுகொள்ளாத மோடி
கடந்த வாரம் மகாராஷ்டிரா முதல்வர் கள் பதவியேற்பு விழா மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஏக்நாத் ஷிண்டேவை கண்டுகொள்ளாமல் இருந் தார். நீண்ட நேர இழுவைக்குப் பிறகு பட்னாவிஸ் மூலம் மோடி, ஷிண்டேவிற்கு கைகொடுத்தார். ஏக்நாத் ஷிண்டேவை பொது மேடையிலேயே பிர தமர் மோடி புறக்கணித்ததற்கு சிவசேனாவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.