india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழையால் பத்தனம்திட்டா, காசர்கோடு, திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு புதனன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் இடுக்கியில் கனமழை தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன்  புதனன்று தொடங்கு கிறது.

“பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமல்ல” என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிலுரை அளித்துள்ளார்.

தில்லியில் ராஜிந்தர் நகரில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டைப் போல கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் தாலுகாவில் நிலச்சரிவு காரணமாக சாலை அடித்துச் செல்லப்பட்ட நிலை
யில், சாலையில் 80 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் ஐந்து கிராமங்கள், ஹோப்ளி தாலுகா உட்பட பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பெண்களின் கண்ணியத்தை புண் படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிக ளின் எண்ணிக்கை 88% அதிகரித்து, தற்போது நாட்டில் 731 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்க ளுக்கு ஓராண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச நாட்களை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை” என்று நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரி வித்துள்ளது.

புதுதில்லி“கான்கிரீட் வீடுகள் கட்டப்படுவதே நிலச்சரிவுக்கு காரணம்”

காலநிலை மாற்றத்தால் பருவகால மழை கூட, புயல் சமயங்களில் பெய் யும் மழை போன்று அதீத அளவில்  கொட்டித் தீர்த்து வரும் நிலையில், மலைப்பாங்கான பகு திகள் மிக மோசமான அளவில் பாதிக்கப்படு கின்றன. கடந்த 6 மாதங்க ளில் சிக்கிம், அசாம், மணிப்பூர், மேகாலயா, இமாச்சலப்பிர தேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மலை சார்ந்த மாநிலங்கள் கடுமையான அளவிற்கு நிலச்சரிவை எதிர்கொண்டு, பலத்த சேதத்தை சந்தித்தன. இந்த வரிசையில் கேரள மாநிலத்தின் வய நாடும் கனமழை நிலச்சரிவால் உருக்கு லைந்துள்ளன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2  கிராமங்கள் புதையும் அளவிற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், “மலைப்பகுதிகளில் கான்கிரீட் வீடுகள் அதிகளவில் கட்டப் படுவதே நிலச்சரிவு ஏற்படக்காரணம்” என்று மருத்துவ விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நதிகள் செல்லும் பாதையை தடுத்து அந்த இடத்தில் வீடு கட்டப்படுகிறது. அதிக பாரமுள்ள கான்கிரீட் கட்டடங்கள் கட்டுவதால் நிலச்சரிவு பிரச்சனை ஏற்படுகிறது” என அவர் கூறினார்.

புதுதில்லி

விவிபாட் - இவிஎம் சரிபார்ப்பு வழக்கின்  மறு ஆய்வு மனு தள்ளுபடி 

மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களின் (இவிஎம்கள்) வாக்கு களை, வாக்காளர் சரிபார்க்கக் கூடிய தணிக்கைச் சீட்டுகளுடன் (விவி பாட்) 100% சரிபார்க்க வேண்டும் என்ற மனுவை நிராகரித்து வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய அருண் குமார் அகர்வால், ஜன நாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அமைப்பு ஆகியவை தாக்கல் செய்திருந்த மனுக்கள் ஒரே வழக்காக உச்சநீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு,”மறுஆய்வு மனுவையும், அதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். எங்கள் கருத்துப்படி ஏப்ரல் 26, 2024 தேதியிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான எந்த காரணமும் இல்லை. எனவே மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படு கிறது” என உத்தரவிட்டது.

புதுதில்லி

மினிமம் பேலன்ஸ் பொதுமக்களிடம் ரூ.8,500 கோடியை பறித்த மோடி அரசு

குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) அபராதம் குறித்து  மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில்,”கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 பொதுத் துறை வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் கடைப்பிடிக்காத வாடிக்கை யாளர்களிடம் இருந்து ரூ. 8,500 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில்ரூ.1,538 கோடியும், இந்தியன் வங்கி ரூ.1,466 கோடியும், பாங்க் ஆப் பரோடா ரூ.1,250 கோடியும், 

கனரா வங்கி ரூ.1,157 கோடியும், பாங்க் ஆப் இந்தியா ரூ.827 கோடியும் மினிமம் பேலன்ஸ் மூலம் அபராதம் வசூலித்துள்ளது. குறிப்பாக கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 2,331 கோடி மினிமம் பேலன்ஸ் அபராதமாக வசூ லிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 25% அதிகமாகும்” எனக் கூறினார். மினிமம் பேலன்ஸ் என்ற பகல் கொள்ளை மூலம் பொதுமக்களிடம் ரூ. 8,500 கோடியை பறித்த மோடி அரசுக்கு ‘இந்தியா’ எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.