புதுதில்லி, டிச. 13 - இந்திய அரசியலமைப்பு ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மக்களவையில் அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தை, ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளியன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து 60 நிமிடங்கள் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அதன்பின் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, எம்.பி.க்கள் பத்ரிஹரி மஹதாப், ஜெகதாம்பிகா பால், தேஜஸ்வி சூர்யா, ரவிசங்கர் பிரசாத், டி. புரந்தேஸ்வரி, அபிஜித் கங்கோபாத்யாய், பி.பி.சவுத்ரி, அபராஜிதா சாரங்கி ஆகியோர் உரையாற்றினர்.
காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர். சச்சி தானந்தம் உள்ளிட்டோர் உரையாற்றினர். தொடர்ந்து சனிக்கிழமையன்றும் விவாதம் நடைபெறுகிறது. இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து உரையாற்றுகிறார்.