புதுதில்லி கடந்த 2022ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தில்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் 42 செவிலியர்கள் பணிநீக்கம் செய் யப்பட்டனர். 13 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஆர்எம்எல் மருத்துவமனை நிர்வாகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
கொரோனா தொற்று நோய்களின் போது உயிரை பணயம் வைத்து மருத்துவப் பணி செய்த எங்களை நீக்குவது நியாயமா? என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் கூட்டாக புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஒன்றிய அரசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசா ரணை முடிவில் பணிநீக்கம் செய்யப்பட்ட 42 செவிலியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா தலைமையிலான அமர்வு,”தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறு எதுவும் இல்லை. தீர்ப்பு சரியானது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.