புதுதில்லி, செப்.20- நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவ காரத்தில் பாஜக மூத்த நிர்வாகி கேசவ விநாயகத்திடம் விசாரிக்க லாம் என்று உச்சநீதிமன்றம் வெள்ளி யன்று அனுமதியளித்தது. கேசவி நாயகத்தின் கோரிக்கையை உச்சநீதி மன்றம் நிராகரித்தது.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மூன்று பேரிடமிருந்து ரூ.4 கோடியை காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். விசாரணையில் அந்தப் பணம் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்த மானது என்பதும், அந்த மூன்று பேரில் முக்கிய நபர் நயினாருக்கு சொந்தமான ஹோட்டலின் ஊழியர் என்பதும் தெரியவந்தது.
காவல்துறை விசாரித்த இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயக மும் சிக்கினார். தொடர்ந்து அவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
சம்மனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது என்பதால் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து வழக்கை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவல கத்தில் ஆஜரானார். இதற்கிடையில் இந்தப் பிரச்சனையில் நீதிமன்ற அனுமதி பெற்றே கேசவவிநாயகத்தை விசாரிக்க வேண்டுமென உயர்நீதி மன்றம் மற்றொரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், கேசவ விநாயகத்தை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவரை தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக அவர் எங்கிருக்கிறார் என்பதை அறிவதற்காக அவரது கைபேசி எண்ணை பெறு வதற்காகத்தான் சம்மன் அனுப்பப் பட்டது என்றார்.
கேசவ விநாயம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பரமேஷ்வர், கேசவ விநா யகத்தின் மீது. அரசியல் நோக்கங் களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், கேசவ விநாயகத்தை நீதி மன்ற அனுமதி பெற்றே விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தர வை ரத்து செய்தனர். விசாரிப்பதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவால் தமிழக பாஜக அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளது.