india

img

வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.10 லட்சம்

வனவிலங்குகளால் உயி ரிழப்போரின் குடும்பத் துக்கான கருணைத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ள தாக ஒன்றிய அரசு தெரிவித் துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணைய மைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில்  எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில்,  “மனிதர்களுக்கும், யானைகளு க்கும் இடையே ஏற்படும் மோத லை குறைக்கவும், பழி வாங்கும் நோக்கத்தோடு யானை கள் கொல்லப்படுவதை தவிர்க்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள் கிறது. காட்டு யானைகளால் ஏற்படும் சொத்து சேதம், உயி ரிழப்புக்கு இழப்பீடு வழங்கப் படுகிறது. இதனடிப்படையில் 2023, டிசம்பர் 22 தேதியிட்ட ஆணையின்படி, வனவிலங்கு களால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து  ரூ.10 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. யானைகளை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரயில் விபத்தில் யானைகள் இறப்பை தவிர்க்க, ரயில்வே அமைச்சகம், சுற்றுச் சூழல், வனத்துறை இடையே நிரந்தரமான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உட்பட யானைகள் அதிகம் உள்ள 15  மாநிலங்களில் 150 யானை  வழித்தடங்களை மாநில வனத்து றைகளின் ஒத்துழைப்புடன் ஒன்றிய சுற்றுச்சூழல், வனத்துறை அமைத்துள்ளது. 2019-20 நிதியாண்டில் ரூ.30 கோடியாக இருந்த யானைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, 2022-23 நிதி யாண்டில் ரூ.35 கோடியாக அதி கரித்தது. ஒன்றிய அரசு ஆதரவு டனான யானைகள் பாதுகாப்புத் திட்டம் 2023-24  நிதியாண்டில் புலிகள், யானைகள் பாதுகாப்பு என்பதாக பெயர் மாற்றம் செய்ய ப்பட்ட பின், ரூ.336.80 கோடி  ஒதுக்கப்பட்டது” என தெரி விக்கப்பட்டுள்ளது.