பாஜகவின் வகுப்புவாத அரசியலால் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக மணிப்பூர் மாநிலம் வன் முறையால் பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறைக்கு 230க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வன்முறைக்கு இடையே மணிப்பூ ரில் அவசரநிலை பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது போன்ற சூழல் உரு வாகியுள்ளது. மாநில பாஜக அரசை விமர்சித்ததற்காகவும், வன்முறை சம்பவங்களை அம்பலப்படுத்திய தற்காகவும் பிரபல பத்திரிகையா ளர் லாபா யாம்பேம் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 17 மாதங்களாக மணிப் பூர் வன்முறை சம்பவம் மற்றும் பாஜக முதல்வர் பைரன் சிங் மோச மான நிர்வாகத்தை ஆதாரத்துடன் சமூக வலைத்தளங்களில் லாபா யாம்பேம் வெளியிட்டு வந்தார். சமீபத்தில்,”மணிப்பூர் என்றால் பைரன் அல்ல. அதே போல பைரன் என்றால் மணிப்பூர் அல்ல. ஆனால் பைரன் மீதான எந்த விமர்சனமும் மணிப்பூரின் விமர்சனம்” எனக் கூறி வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ தேசிய அளவில் டிரெண்ட் ஆகிய நிலையில், யாம்பேமை இப்படியே விட்டு விட்டால் மணிப் பூரை அழிக்கும் நோக்கம் உடைந்து விடும் என அஞ்சிய பாஜக அரசு அவர் மீது பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்துள்ளது.
பத்திரிகையாளர் யாம்பேமின் நெருங்கிய கூட்டாளி ஒருவர், யாம் பேமுக்கு சொந்தமான உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன் படுத்தி தன்னை மிரட்டியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள் ளதாகவும், அதன் அடிப்படையில் அவர் மீது கொலை குற்றப்பிரி வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக மணிப்பூர் காவல் துறை அறிக்கை வெளியிட்டுள் ளது. இது போலி கொலை வழக்கு என்பதால் போலீஸ் விசாரணைக் கும், நீதிமன்றத்திலும் யாம்பேம் ஆஜராக வாய்ப்பில்லை என அவரது வழக்கறிஞர் கூறி யுள்ளார்.
கடந்த மாதம் இம்பால் மேற்கு பகுதியில் உள்ள யாம்பேமின் வீடு மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி தீ வைத்து கொளுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக அரசின் முதல்குறி பத்திரிகையாளர்கள் தான்
மணிப்பூரில் குக்கி, ஸோ உள்ளிட்ட பழங்குடியின மக்களை துரத்தி அவர்களது பூர்வீக இடங்களை கைப்பற்றுவதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. இதற்காக தான் 17 மாத மாக அங்கு வன்முறை சம்பவங்கள் நீண்டு வருகிறது. மோடி அரசு பழங்குடியின மக்களை துரத்த மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. வன் முறை சம்பவங்கள் தேசிய அளவு பிரச்சனையாக இருப்பதற்கு பத்திரி கையாளர் மட்டுமே காரணமாக இருப்பதால் அவரை ஒடுக்கி விட்டால், பழங்குடியின மக்களின் பூர்வீக இடங்களை கைப்பற்றி மணிப்பூரில் பிரம்மாண்ட அரசியல் ஆதாயத்தை பெற்றுவிடலாம் என பாஜக கணக்குப் போட்டு வருகிறது. அதன் காரணமாகவே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பத்திரிகையாளர்கள் மீது மணிப் பூர் பாஜக அரசு வழக்கு பதிந்து மிரட்டல் விடுத்து வருகிறது.