தன்னை ஊழல்வாதியாக சித்தரிக்க பிரதமர் மோடி சதி செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி யுள்ளார்.
தில்லி ஜந்தர் மந்தரில் நடை பெற்ற மக்கள் மன்றத்தில் (பொதுக் கூட்டத்தில்) கெஜ்ரி வால் பேசுகையில்,’நான் 10 ஆண்டுகள் நேர்மையாக செயல்பட்டு தில்லி முதல்வ ராக இருந்துள்ளேன். எனக்கு அதிகார இருக்கை மீது ஆர்வம் இல்லை. அத னால் தான் ராஜினாமா செய்தேன். நேர்மையாக இருப்பதால் பாஜகவினர் என்னை ஊழல்வாதி என்று கூறுகின்றனர். நான் திருடனாக இருந்தால் பள்ளிக்கூடம் கட்டுவேனா? மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளிக்க திட்டம் கொண்டு வரு வேனா? பெண்களுக்கு இலவச பயணம் அனுமதி அளிப்பேனா? பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்று நடக்கிறதா? இல்லை. அதனால் தான் என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க பிரதமர் மோடி சதி செய்துள்ளார்” என அவர் கூறினார்.