தில்லி முதல்வர் அதிஷியின் வீடு சீல் வைப்பு
தில்லி முதல்வர் அதிஷியின் அதி காரப்பூர்வ இல்லத்துக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதனன்று மாலை சீல் வைத்தனர். இந்த விவகாரம் கடும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தில்லி முதல்வர் அலு வலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிளாக் ஸ்டாப் சாலையில் அமைந்துள்ள அதிகாரப் பூர்வ முதல்வர் இல்லம் பாஜக வின் உத்தரவின் பேரில் வலுக்கட்டாய மாக காலி செய்யப்பட்டது. தில்லி ஆளுநர் வி.கே.சக்சேனா அந்த இல்லத்தை பாஜக தலைவருக்கு ஒதுக்க விரும்புவதால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் வெற்றிக்கு உதவிய (!?) ஆம் ஆத்மி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹரி யானா சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளை கைப்பற்றி பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி யை கைப்பற்றியது. வாக்கு எண்ணிக்கை யின் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி 37 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி யை தழுவியது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு கோஷ்டி பூசல் (செல்ஜா - பூபிந்தர் சிங் ஹூடா இடையே) உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இதில் முக்கிய காரணமாக இருப்பது ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண் டிய வாக்குகளை பிரித்தது தான். காங்கி ரஸ் (39.09%) - பாஜக (39.94%) இடையே யான வாக்கு சதவீதம் வெறும் 0.85% ஆக உள்ளது. தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி 1.79% வாக்குகள் பெற்றதுடன், காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண்டிய வாக்குகளை பிரித்தது. இதன் காரண மாகவே காங்கிரஸ் கட்சி ஹரியானாவில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பி டத்தக்கது.