மோடி தலைமையிலான பாஜக அரசு பெண்களை அவமானப்படுத்தியுள்ளதாகவும், மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே கூறியதாவது:
"மோடி தலைமையிலான பாஜக அரசு பெண்களை அவமானப்படுத்தியுள்ளது. மணிப்பூரில் கலவரம், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை என மொத்த 10,000 வழக்குகள் பதிவாகியுள்ளன; நாம் இவ்வளவு உணர்ச்சியற்றவர்களாய் ஆகிவிட்டோமா? இதுதான் இந்த அரசின் பிரச்சினை. கடந்த 9 ஆண்டுகளில் 9 மாநில அரசுகளை பாஜக கவிழ்த்துள்ளது; விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை மோடி அரசு கட்டுப்படுத்தவில்லை. மத நல்லிணக்கத்தையும், நிறுவனங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.