தலைநகர் டெல்லியில் வரும் சனிக்கிழமை 109 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. ஒரு சில பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் டெல்லியின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியசைத் தாண்டியது.
இந்தநிலையில் வரும் சனிக்கிழமையன்று தலைநகர் தில்லியில் வெப்பநிலையானது 109 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வெப்பமும், வெப்பக் காற்றும் வீசி வரும் டெல்லியில், இன்று அதிகபட்ச வெப்பநிலையானது 104 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது படிப்படியாக உயர்ந்து சனிக்கிழமை 109 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.