ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014இல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அதிகபட்சமாக முப்தி முகமது சயித்தின் மக்கள் ஜன நாயக கட்சி (பிடிபி) 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 தொகுதிகளி லும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 தொகுதி களிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தி லும் வெற்றி பெற்றன.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் பிடிபி - பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. முதல்வராக பிடிபி தலைவர் முப்தி முகமது சயித் பொறுப் பேற்றார். முப்தி முகமது சயித் மறை வுக்குப் பிறகு அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்றார். ஜம்மு-காஷ்மீரில் பிடிபி - பாஜக இணைந்த கைகளாக செயல்பட்டு வந்த நிலையில், 2019இல் மோடி அரசு ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 பிரிவு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் பிடிபியின் பாஜகவுடனான உறவு முறிந்தது. அதன்பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத நிலையில், பிடிபி கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி “இந்தியா” கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்தது. மக்களவை தேர்தலில் பிடிபி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை குதிரை பேரம் மூலம் தங்கள் பக்கம் வளைத்த பாஜக, 2 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் 3 தொகுதிகளில் போட்டியிட்ட பிடிபி கட்சியோ ஒரு தொகுதியை கூட வெல்லவில்லை. முன்னாள் ஆளும் கட்சியான பிடிபி ஒரு தொகுதியில் கூட வெல்லாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாநில சூழ்நிலைக்கு ஏற்ப தனித்து போட்டியிட்ட பிடிபி கட்சி வெறும் 3 தொகுதிகளை மட்டுமே வென்று அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. மக்களவை தேர்தலைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் பாஜக பிடிபி கட்சியை உடைத்தது. பிடிபி கட்சி யின் நிலைமையை உணர்ந்த “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கூட்டணிக்கு வரு மாறு அழைப்பு விடுத்தன. ஆனால் பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி மறுப்பு தெரிவித்தார். “இந்தியா” கூட்டணி யில் இணைய பிடிபி மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் மெகபூபா முப்தி முரண்டு பிடித்தார். இதையடுத்து பிடிபி மூத்த தலைவர்கள் பலர் “இந் தியா” கூட்டணிக் கட்சிகளில் இணைய விருப்பம் தெரிவித்தனர். ஆனால் “இந் தியா” கூட்டணிக் கட்சிகள் சேர்க்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் பிடிபி மூத்த தலைவர்கள் பலர் பாஜகவுடன் கை கோர்த்து அக்கட்சி 15 தொகுதிகளை வெற்றி பெற உதவியுள்ளனர். இதன் காரணமாகவே பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுடன் நட்பு றவு வைத்த பெரும்பாலான கட்சிகள் தங்களது செல்வாக்கை இழந்து வரு வதைப் போல, மக்கள் ஜனநாயக கட்சி யும் செல்வாக்கை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.