india

img

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து விட்டதாம்

மோடி பிரதமர் ஆன பின்பு ஜம்மு-காஷ்மீரில் பயங் கரவாத தாக்குதல்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக 370 ஆவது சட்டப் பிரிவு நீக்கத்திற்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவில், வாரத்தில் 3 அல்லது 4 தாக்கு தல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

முன்பெல்லாம் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையிருக்கும், பயங்கர வாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையுடன் படுகாயம், உயிரிழப்புகள் ஏற்படும். ஆனால் தற்போது மக்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. கடந்த வாரத்தில் கூட ஜம்மு-காஷ்மீரில் 3 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் ஞாயிறன்று (நவ., 3) ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தில் பயங்க ரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாய மடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் சூழலில், அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து விட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில்,”ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் உள்ளனர். அத னால் முந்தைய காலங்களை விட ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்க ளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள் ளது. வரும் காலங்களில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்” என அவர் கூறினார்.