உ.பி முதல்வர் யோகி ஆதித்தியநாத் மீது குற்றவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராகப் போராடிய பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்காகச் சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர்களின் சிறப்புக் குழு சார்பாக யோகி ஆதித்தியநாத் மீது குற்றவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.