உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தான் பெண்களுக்கு பணி நேரம் அதிகம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் புனேவில் உள்ள EY நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தாயார் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள இந்தியாவின் பணிச்சுமை மற்றும் பணி நேரம் குறித்த தகவல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இந்தியாவில் இளம் பெண்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 55 மணி நேரம் வேலை செய்கின்றனர். குறிப்பாக வாரத்தில் 5 நாட்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டாலும் ஒரு நாளைக்கு 11 மணிநேரம் வேலை செய்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐடி மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் பெண்கள் 56.5 மணி நேரமும், அறிவியல், தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பெண்கள் 53.2 மணி நேரமும், ஒரு ஆசிரியை வாரத்திற்கு 46 மணி நேரமும் பணியாற்றுகின்றனர்.
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அதாவது ஜெர்மனியில் பெண்கள் 32 மணி நேரமும் ரஷ்யாவில் பெண்களுகள் 40 மணி நேரமும் வேலை செய்கின்றனர்.
பொதுவாக ஆண் பெண் இருவருக்குமே 50 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வது என்பது மிகுந்த பணிச்சுமையையாக இருக்கும். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவலத்தில் 11 மணி நேரம் வேலை செய்துவிடு வீட்டிலும் 5 முதல் 6 மணி நேரம் வேலை செய்கின்றனர். பெண்களின் வீட்டு வேலைகளை குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்வதில் இன்னும் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதால் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
19,20ஆம் நூற்றாண்டுகளில் கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டங்களால் முதன்முதலில் 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட 8 மணி நேர வேலை திட்டம் சோவியத்தில் தான் முதன்முறையாக சட்டமாக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியா போன்ற பல நாடுகளில் சட்டமாக்கப்பட்டது.
ஆனால் உலகமயமாக்களுக்கு பிறகு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேலை நேரம் அதிகரித்திருக்கிறது அதை சட்டமாக்கும் வேலைகளும் நடந்துவருகிறது. மனிதர்களை மனிதர்களாக பார்ப்பதற்கு பதிலாக கொள்ளை லாபத்திற்காக இயந்திரங்களாக பாவிக்கும் சூழல் அதிகரித்து வருகிறது. இது தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலத்திற்கே நல்லதல்ல. தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இருக்கிறது. அரசுகளே விதிகளை மீற முனையும் போது, தொழிலாளி வர்க்கம் ஒன்றாய் இணைந்து அந்த அரசுகளையும் அதிகாரித்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும்.