2018-ஆம் ஆண்டிற்கும் 2020-ஆம் ஆண்டிற்கும் இடையில் 16,000-க்கும் மேற்பட்டோர் கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், 2018-ஆம் ஆண்டிற்கும் 2020-ஆம் ஆண்டிற்கும் இடையில் 9,140 பேர் வேலையின்மை காரணமாக தற்கொலைச் செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
2020-இல் 5,213 பேரும், 2019-இல் 5,908 பேரும், 2018-இல் 4,970 பேரும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று எழுத்துப்பூர்வமாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார்.