headlines

img

கொரோனாவை விடக் கொடியது அரசின் நடவடிக்கை

மோடி தலைமையிலான பாஜக அரசு வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட் கப்பட்ட கேள்வி  மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்த 50 பேரும் கூழுக்கு அலைகிற அன்றா டங்காய்ச்சிகள் அல்ல. கும்பி வெடித்துச் சாகிற அளவுக்கு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி நோக்கி தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக உள்ள நெடுஞ்சாலைகளில் அக்னி வெயில் என்றும் பாராமல்  வெறும் காலில் நடந்துகொண்டிருக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களும் அல்ல. பல தலைமுறைகளுக்குச் சொத்து குவித்து வெளி நாடுகளில் பதுங்கிக் கொண்டு உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பவர்கள். இப்படிப்பட்ட மிக மோசமான குற்றவாளிகளுக்குத்தான் பாஜக அரசு கருணை காட்டியுள்ளது.

கைகளில் விலங்குகளை மாட்டி சிறைச் சாலைகளின் கொட்டடியில் இருக்கவேண்டிய இவர்கள் இன்று ஆட்சியாளர்களின் முழு ஆசி யுடன் வெளிநாடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை நிச்சயம் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம், வராக்கடனைக் கட்டாயம் வசூலிப்போம் என்று பாஜக அரசு கூறி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. சட்டப்படி அவர்களை வெளிநாடுகளிலிருந்து மீட்பதற்கும் ஆக்கப்பூர்வான  நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

கடனை ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என்று கேட்டால், கடனை தள்ளுபடி செய்யவில்லை, அந்த தொகையை வங்கியின் வரவு செலவில் காட்டாமல் தனியாக ஒதுக்கி வைத்திருப்பதாக விளக்கம் அளிக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதுவரை இப்படித் தள்ளி வைக்கப்பட்ட எந்த கடன் தொகையையாவது அரசு வசூலித்தது  உண்டா? அல்லது அவர்களின் சொத்துக்களையாவது பறிமுதல் செய்ததுண்டா?

ஊரடங்கு எத்தனை நாள் தொடருமோ? மீண்டும் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக் குமா?  எனத் தொழிலாளிகளும் ஏழை எளிய மக்க ளும் பெரும் கவலையில் உள்ளனர்.   மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள் எப்படி இயல்பு நிலைக்குத் திரும்பப் போகிறது என்பது தெரியவில்லை? இந்த நெருக்கடியான காலத்தில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை  நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும்.

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கு என்று கேட்டால் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கார்ப்பரேட்டுகள் மீது வரிபோடு வதற்குப் பதில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்க ளின் சம்பளத்திலும் ஓய்வூதியர்களின் அக விலைப்படியிலும் கைவைத்துள்ளனர். கார்ப்ப ரேட் முதலாளிகள் மீது ஒரு விழுக்காடு செல்வவரி போட்டால் கூட பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கும். இதைச்செய்யாமல் பொ துத்துறை வங்கிகளைச் சூறையாடிய கொள்ளை யர்களைக் காப்பாற்றியிருக்கும் மோடி அரசின் செயல் கடுமையான  கண்டனத்திற்கு உரிய தாகும்.

;