headlines

img

பாசமா? பசப்பா?

தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற வர்களுக்கு தமிழ் மீது பாசம் பொங்கி வழிகிறது.  ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் என்கிற முறையில் இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு தருகிற முக்கியத்துவத்தில் ஒரு பகுதியைக் கூட தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு தருவதில்லை.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமை யைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத் துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழில் பாடத்திட்டங்களை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

துவக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அவரவர் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும்  என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அந்த வகையில் மருத்துவம் உள்ளிட்ட படிப்பு களும் நிச்சயம் தமிழில் வேண்டும். 12 ஆண்டுக ளுக்கு முன்பே பொறியியல் கல்வியை தமிழ கத்தில் அறிமுகப்படுத்தி விட்டோம் என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறி யுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. அதே போன்று மருத்துவப் படிப்புக்கான நூல்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி ஏற்கெனவே துவங்கி விட்டது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே கூறியுள்ளார்.

கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தமிழில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. இங்கு எழுகிற கேள்வி என்னவென் றால், தமிழ் மொழி வளர்ச்சியை ஒன்றிய ஆட்சி யாளர்கள் உண்மையிலேயே விரும்புகிறார்க ளா? இல்லை தமிழக மக்களை ஏமாற்ற பசப்பு கிறார்களா? என்பதுதான்.

சமஸ்கிருத மொழிக்கு கோடிகோடியாக கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழை செம்மொழி என்று அறிவிக்கச் செய்வதற்கே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருந் தது. சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்தது போல செம்மொழி தமிழ் ஆண்டு என அறிவிக்கு மாறு அன்றைக்கே நாடாளுமன்ற மக்களவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொ.மோகன் குரல் கொடுத்தார். ஆனால் இன்று  வரை அது நிறைவேறவில்லை.

அண்மையில் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இந்தியை முன்னிறுத்தும் வகையில் பல்வேறு பரிந்துரைகளை தந்தது. அப்போது ஏன் தமிழின் தொன்மை அமித்ஷாவுக்கு தெரியவில்லை. இவர்கள் உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு தாய்மொழி வழிக் கல்வி தள்ளி வைக்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணை யில் இடம் பெற்றுள்ள மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக, ஆட்சி மொழி யாக அறிவிக்க அமித்ஷா தயாரா? அதை விடுத்து தமிழின் தொன்மையை வியந்து பேசுவது வெறும் ஏமாற்று வேலையே.