headlines

img

ஒன்றிய அரசின் அநியாய அறிவிப்பு

காலை 6 மணி முதல் 10 வரையும் மாலை 6 மணி  முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்படுத்தப் கடும் மின்சாரத்திற்கு கூடுதலாக 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒன்றிய அரசு  அறிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக் கும் மக்களுக்கும் நெருக்கடியை நரேந்திர மோடி அரசு உருவாக்கியுள்ளது. மின் தேவை  அதிக மாக இருக்கும் நேரங்களில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. 

ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பி னால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கே உள்ளது என்றும் அதன்படி உச்சநேர அளவு கட்டணம் வீட்டு  நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட வில்லை என்றும் அது தெரிவித்துள்ளது. 

ஆனாலும் ஒன்றிய அரசின் அறிவிப்பு என்பது தலைக்குமேல் தொங்கும் கத்தியாகவே உள்ளது. ஏற்கெனவே உதய் மின் திட்டத்தை ஏற்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் கொடுத்தது. இந்தத் திட்டத்தை ஏற்காவிட்டால் மாநில அரசுகள் கடன்பெற முடியாது என்று ஒன்றிய அரசு மிரட்டியது. கொரோனா காலத்தில் நிவாரணத் தொகை பெறுவதற்குக் கூட உதய் மின் திட்டத்தை முன்நிபந்தனையாக ஒன்றிய நிதி அமைச்சர் முன்வைத்தார். 

மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளு மன்ற மக்களவையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மின்விநியோகத்தை தனி யாருக்கு தாரைவார்ப்பது, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பது உள்ளிட்ட ஆபத்தான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இம்மசோதா தற்போது நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், இதை சட்டமாக்கு வதில் மோடி அரசு பிடிவாதமாக உள்ளது. இந்த  சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவ சாயத்திற்கான இலவச மின்சாரம் 100 யூனிட் வரை வீடுகளுக்கு இலவச மின்சாரம் என தமிழகத்தில் உள்ள சலுகைகள் பறிபோகும். 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய வற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி செங்குத்தான நிலையில் நிறுத்தி வைத்துள்ள ஒன்றிய பாஜக கூட்டணி அரசு மின் கட்டணத்தையும் உயர்த்த வகை செய்கிறது. மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் நேரத்திற்கு கூடுதல் கட்டணம் என்பது அப்பட்ட மான அநீதியாகும். மாநில அரசுகள் இதை ஏற்கக்கூடாது. கார்ப்பரேட் முதலாளிகள் கை யில் மின் துறையை முற்றாக ஒப்படைப்பதன் முன்னோட்டமாகவே இந்த கட்டண உயர்வை மோடி அரசு அறிவித்துள்ளது. இல்லங்களிலும், விவசாயம், தொழில்துறையிலும் இருள் சூழ வழிவகுக்கும் இத்திட்டம் முறியடிக்கப்பட வேண்டும்.