பாஜக ஆட்சியில் ஊடகங்கள் முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட வாய்ப்பு அளித்துள் ளதாகவும், எந்த ஊடக நிறுவனங்கள் மீதும் எவ் வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழான பாஞ்சஜன்யா சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசியுள்ளார்.
ஆனால், உலக பத்திரிகை சுதந்திர குறியீட் டில் 2022ஆம் ஆண்டில் இந்தியா 150 ஆவது இடத் தையே பிடித்து பின்தங்கியிருக்கிறது என்பதுதான் எதார்த்த நிலைமை. 2021 ஆம் ஆண்டு 142 ஆவது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு மேலும் சரிவ டைந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டு, மறைத்து விட்டுப் பேசுகிறார் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், 3 அல்லது 4 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படு கிறார்கள். அதனால் இந்தியா மிக அபாயகர மான நாடு என்று எல்லைகளற்ற செய்தியாளர் கள் அமைப்பு கூறியுள்ளது. ஆண்டுதோறும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அதி கரித்து வருவதே நடைமுறையாக மாறியிருக்கி றது. ஆனால் அதனை மறைக்க முந்தைய காங்கிரஸ்ஆட்சியாளர்கள் மீது குறை சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள், ஒன்றிய ஆட்சி யாளர்கள் என்பதையே அமைச்சரின் பேச்சு வெளிப்படுத்துகிறது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஊடகங் களின் இருண்டகாலம் முழுவதும் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டதுதான் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஆனால் இவர்களது ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலையாக பத்திரி கையாளர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் சுதந்திரமான செயல்பாடுகள் முடக்கப்படுவதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதையே தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவின் 2020 ஆம் ஆண்டு 55 செய்தி யாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்து டன் பலர் மீதும் எப்ஐஆர் போடுவது, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது, உடல் ரீதியான தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக ‘தி வயர்’ இணைய இதழ் அம் பலப்படுத்தியுள்ளது. அந்த ஆண்டிலேயே மணிப்பூரி செய்தியாளர் வாங்ஹெம் கைது செய்யப்பட்டார். அக்டோபர் மாதம் சித்திக் கப் பான் என்ற செய்தியாளர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மிக நீண்ட நெடிய சட்டப்போராட் டத்திற்கு பின்னரே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு 67 பேர் கைது செய்யப்பட்ட னர்; 200 உடல்ரீதியான தாக்குதல்கள் நடைபெற் றன என்று கீதா சேஷு ஆய்வு ஒன்றில் கூறி யிருப்பதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள் ளது. அத்துடன் ஆல்ட் நியூஸ் எனப்படும் உண்மை தன்மை கண்டறியும் இணைய பத்தி ரிகை நடத்திய முகமது சுபேர் கைது செய்யப் பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதும் இவர்க ளது ஆட்சியில்தான். ஆனால் ஊடகங்களுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று முழு பூசணிக் காயை சோற்றில் மறைக்க முயல்கிறார்.