headlines

img

எச்சரிக்கை!

பொதுசிவில் சட்டத்திற்கு எதிராகக் கேரள சட்டப்பேரவையில்  ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது இந்திய அரசியல் சாசனத்தை அழித்து, மனுஸ்மிருதி அடிப்படையில் இந்து ராஷ்டிரத்தை உருவாக்க முயலும்  ஒன்றிய மோடி அரசிற்குக் கேரளம் விடுக்கும் எச்சரிக்கையாகும்.

ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட  இடத்திற்கு இடம்  திருமண முறை உள்ளிட்ட பல்வேறு பழக்க வழக்கங்களும், நம்பிக்கைக ளும் மாறுபடுகின்றன.  ஒரே சாதிப்பிரிவிற்குள் ளும் வட்டாரத்திற்கு வட்டாரம் பழக்க வழக்கங்கள் வேறுபடுகின்றன. இவர்கள் அனை வரையும் ஒரே பழக்கத்தை மட்டுமே  கடைப் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா?

அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 மதச் சுதந்தி ரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதே போல் மத ரீதியாகத் தனி விதிமுறைகளைப் பின்பற்றும் உரிமையையும் அளிக்கிறது. இதற்கு எதிராக எந்தவொரு சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அது அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறுவதே ஆகும். 

இந்தியாவின் பலமே வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மைதான். சிறு பான்மையினர், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் தனித்துவமான கலாச்சாரம் இருக்கிறது. அதனை அழித்து ஒரே மாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்க நினைப்பது கொள்ளிக்கட்டையைக் கொண்டு முதுகு சொறிவது போல் ஆகும். 

21 ஆவது இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராக  இருந்த  நீதிபதி  பி.எஸ் சௌகான் “வெவ்வேறான கலாச்சாரங்கள் இருப்பது பாகுபாட்டைக் குறிக்காது. அது வலுவான ஜன நாயகத்தையே குறிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் பொது சிவில் சட்டம் தேவை யற்றது” என தெரிவித்துள்ளார்.  ஆனால் 22 ஆவது சட்ட ஆணைய தலைவராக நீதிபதி ரிதுராஜ் வந்த உடனே  “இந்து ராஷ்டிர” கனவின் அடிப்படையிலேயே கருத்துக் கேட்பு  அறிக்கை வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தே கங்களை  எழுப்புகிறது.

பெண்ணுக்குச் சொத்துரிமை, வாரிசுச் சட்டம், ஒரு தார மணம், ஜீவனாம்சம் ஆகிய வற்றில் திருத்தம் செய்து  இந்து சட்ட மசோ தாவை 1951 ஆம் ஆண்டு அம்பேத்கர் கொண்டு வந்தபோது  எதிர்த்தது யார்? இதே சங் பரிவார் கூட்டம்தான்.   பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாகக் கொண்டுவர ஒன்றிய அரசு மறுப்பதேன்? காரணம் மனுஸ்மிருதி அதனை ஏற்கவில்லை.

பொதுசிவில் சட்டத்தைத் திணிப்பது ஒட்டு மொத்த தேசத்தின் ஒற்றுமையின் மீதான தாக்கு தலாகவே அமையும். இந்தியாவின் ஒற்றுமைக் கும், முன்னேற்றத்திற்கும் ஊறு விளைவிக்கும் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக மிசோராம், கேரளா போன்று அனைத்து மாநில அரசுக ளும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.