வேளாண் துறையை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கைமாற்றி விடும் வரையில் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை வம்படி யாக கொண்டு வந்தது மோடி அரசு. இதை எதிர்த்து இந்திய விவசாயிகள் தலைநகர் தில்லி யிலும், நாடு முழுவதிலும் வீரஞ் செறிந்த போராட் டங்களை நடத்தினர். இந்த திருத்தச் சட்டங்க ளை வாபஸ் பெறவே முடியாது என மோடி அரசு அடம்பிடித்தது. வரலாறு காணாத அடக்கு முறையை போராடிய விவசாயிகள் மீது கட்ட விழ்த்துவிட்டது.
ஆனால் விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டமே வென்றது. வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக மோடி அரசு வேறு வழியின்றி அறிவித்தது. ஆனால் விவ சாயிகள் கோரியபடி மின்சார திருத்தச் சட்டத்தை கைவிட மறுக்கிறது. இந்தச் சட்டத் தைக் கொண்டு வந்து தமிழகம் உட்பட சில மாநிலங்களில் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பறிக்க முயல்கிறது. மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்து நுகர் வோர் தலையில் நெருப்பள்ளிப் போடமுயல்கிறது.
மறுபுறத்தில் வேளாண் திருத்தச் சட்டங்க ளில் இடம் பெற்றிருந்த விவசாயிகள் விரோத அம்சங்களை நரித்தனமாக, நயவஞ்சகமாகக் கொண்டு வர முயல்கிறது. இதில் ஒன்றுதான் தானிய கொள்முதலை கொஞ்சம் கொஞ்சமாக தனியாரிடம் ஒப்படைத்து ஒரு நிலையில் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து அரசு முற்றாக விலகிக் கொள்ளும் திட்டமாகும்.
நெல் மற்றும் கோதுமை கொள்முதல் மூல மாகத்தான் அரசு பொது விநியோகத் திட்டத் தின் கீழ் மானிய விலையிலும், இலவசமாகவும், தானியங்களை வழங்க முடிகிறது. வேளாண் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஓரளவுக்காவது உறுதி செய்ய முடி கிறது. ஆனால் தற்போது நெல் கொள்முதலில் தனியாரை நுழைக்கத் துணிந்துவிட்டது ஒன்றிய அரசு.
முன்பேர வர்த்தகம், உணவு தானியங்களை பதுக்குவதன் மூலம் செயற்கையாக பற்றாக் குறை என உருவாக்கி கடுமையாக விலை உயர்த்தி அரிசி மற்றும் கோதுமையை கார்ப்பரேட் நிறுவ னங்கள் இப்பொழுதே விற்கின்றன. கொள்முத லும் மொத்தமாக அவர்கள் கைக்குச்சென்று விட்டால் நாட்டில் மீண்டும் உணவுப் பஞ்சமும், உணவுக் கலவரமும் ஏற்படும் சூழல் உண்டாகும்.
ஆனால் தேவைக்கு அதிகமாக அரசு ஏன் கொள்முதல் செய்ய வேண்டும் என விதண்டா வாதம் பேசுகிறார் ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் சுதான்சு பாண்டே. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை மறுப்பது, பொதுமக்களுக்கு நியாய விலையில் உணவு தானியம் கிடைப்பதை மறுப்பது என இரட்டை தாக்குதலை நடத்துகிறது மோடி அரசு. இதற் காக மறைமுகமாக இவர்கள் வேளாண் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தால் விவசாயிகள் நேரடியாகக் களத்தில் இறங்குகிறார்கள்.