headlines

img

இதுவா மதிப்பு உயர்வு?

சர்வதேச அரங்கில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒழுக்கம், அமை தியை விரும்பும் மக்கள் என்று இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டப்படுகிறது என்று திங்களன்று புதுதில்லியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.

ஆனால் உள்நாட்டில் அத்தகைய நிகழ்வு கள்தானா நடக்கின்றன என்பதை அவரது மனதின் குரலே எதிர்க்கேள்வி எழுப்பும். அமைதியை விரும்புபவர்கள் இந்திய மக்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவரது கட்சியினரும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் அத்தகைய சிந்த னையிலும், செயல்பாட்டிலுமா இருக்கிறார்கள்?

பாஜக தேர்தல்களில் வெற்றி பெற வேண்டு மென்பதற்காக வெடிகுண்டுகளை தயாரித்து மசூதிகளில் வைக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டது என்று அதன் முன்னாள் ஊழியர் ஷிண்டே என்ப வர் உயர்நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் மனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இந்துக்கள் ஆயுதங்களை வீடுகளில் சேர்த்து வையுங்கள். கத்திகளை கூர்மையாக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று வெடிகுண்டு புகழ் பிரக்யாசிங் தாக்குர் அண்மையில் பேசியது அமைதிக்கான நடவடிக்கைதானா?   

இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பு அரசி யல் அதிகரிப்பதற்கு எதிராக அமெரிக்க அரசாங் கம் நிலைபாடு எடுக்க வேண்டுமென வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அமெரிக்க அரசை வலி யுறுத்தியது ஏன்? உ.பி.பாஜக அரசாங்கத்தின் புல்டோசர் அரசியலை பிரிட்டனின் பி.பி.சி செய்தி நிறுவனமும், பிரான்ஸ் 24 ஊடகமும் கடுமையாக விமர்சனம் செய்தது எதற்காக?

எதிர்க் கருத்தாளர்களை சித்ரவதை செய்வ தையும் பின்னர் விசாரணை என்ற பெயரில் சிறை யில் அடைப்பதும் பாஜக அரசின் சட்டவிரோத நட வடிக்கைகள் அல்லாமல் வேறென்ன? இத்தகைய எதிர்மறை  விமர்சனங்களையெல்லாம் காதில் போட்டுக்  கொள்ளாமல் சர்வதேச அரங்கில் இந்தி யாவின் மதிப்பு உயர்வதாகக் கூறுவது உண் மையை மறைப்பது ஆகாதா?

உலகின் ஐம்பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது என்று பொது வாக மோடியும், அவரது அமைச்சர்களும் பீற்றிக் கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டில் மட்டும் 5.6 கோடிப் பேர் வறுமையில் தள்ளப்பட்டனர் என்று உலக வங்கி கூறியுள்ளது. ஆனால் பிரதமரின் நண்பர் அதானி உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முன்னேறி இருக்கிறாரே இதைத்தான் கூறுகிறாரோ? 

இந்தியா உலகின் அறிவு மையமாக மாறிவருவ தாகவும் பிரதமர் கூறுகிறார். ஆனால் மழலையர் வகுப்பிலிருந்து ஆராய்ச்சிக் கல்வி வரை அறி வியல்பூர்வமான கேள்வி அறிவாற்றலை சிதை த்து பாசிச இந்துத்துவா மதவாத நிகழ்ச்சி நிரலை நிலைநிறுத்த பழமைவாதம், மூட நம்பிக்கை, கண்மூடித்தனமான கற்பிதங்கள் ஆகியவற்றை கல்வியின் அடித்தளமாக மாற்றுகிற கல்விக் கொள்கையை வைத்துக் கொண்டு இவ்வாறு அவர் பேசலாமா? இது அறிவு வளர்ச்சியா?