பத்தாண்டு கால மோடி ஆட்சியில் தேசத் தின் ஒட்டு மொத்த கடன் 153 லட்சம் கோடி ரூபாயாக, எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தேசத்தின் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்க ளின் சேமிப்புகளைச் சுரண்டி 14.56 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தனது கூட்டுக் களவாணிக ளுக்கு கொடுத்து, அதை வராக் கடன் என்ற பெயரில் முற்றாகத் தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு.
நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் மீதான சுரண்டலும், கார்ப்பரேட் பெரும் முதலா ளிகளின் மூலதனக் குவிப்பும், அதற்கு ஏற்றவாறு நாட்டின் கொள்கைகளை வடிவமைத்தது மட்டு மின்றி, அதை அமலாக்குவதற்கு உச்சகட்ட மத வெறியையும், இன வெறியையும் ஏவிவிட்ட மோடி அரசின் எதேச்சதிகார ஆட்சியும் இணை ந்து, மொத்த மக்கள் தொகையில் உச்சாணிக் கொம்பில் உள்ள வெறும் 1 சதவீதம் நபர்களிடம் நாட்டின் ஒட்டு மொத்த தேசிய வருமானத்தில் 40.5 சதவீதத்தை குவிக்கச் செய்துள்ளன; அவர்க ளுக்கு அடுத்துள்ள 10 சதவீதம் நபர்களிடம் 72 சதவீத வருமானத்தை குவிக்கச் செய்துள்ளன; மறுபுறத்தில், உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து வரும் விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க மக்கள் உள்ளிட்ட அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதம் மக்களின் கைகளில் ஒட்டு மொத்த தேசிய வருமானத்தில் வெறும் 3 சதவீதம் மட்டுமே கிடைக்கச் செய்திருக்கின்றன.
கார்ப்பரேட் மூலதனமும் அதன் லாப வெறிக் காக சேவகம் செய்யும் மதவெறி மோடி அர சும் கூட்டுச் சேர்ந்து நடத்துகிற இந்த கொடிய தாக்குதலுக்கு எதிராக இந்தியத் தொழிலாளி வர்க்கமும் இந்திய விவசாய வர்க்கமும், தேசத் தின் வரலாற்றில் முதன் முறையாக - கட்சி வேறு பாடின்றி, சங்க வேறுபாடின்றி, பிரதேச வேறுபா டின்றி, இனம்- மொழி- மதம் உள்ளிட்ட வேறுபாடு கள் எதுவுமின்றி தொழிலாளர்கள், விவசாயிகள் என்ற வர்க்க உணர்வோடு ஒன்றுபட்டிருக்கி றார்கள். அதன் மகத்தான சங்கமம் தான் ஆகஸ்ட் 24 வியாழனன்று தில்லியில் கூடியுள்ள அகில இந்திய தொழிலாளர்- விவசாயிகள் கூட்டு சிறப்பு மாநாடு.
ஏற்கெனவே இடதுசாரி இயக்கங்களின் தொழிலாளர் அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து பல பிரம்மாண்டமான கூட்டுப் போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால் இப்போதுதான், இடதுசாரி இயக் கங்கள் மட்டுமின்றி, அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும், 400க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை உள்ளடக்கிய - ஓராண்டு காலத் திற்கும் மேலாக மோடி அரசையே கதி கலங்கச் செய்த உலகின் மிகப் பெரும் விவசாயிகள் எழுச்சியை நடத்திக் காட்டிய - சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் கைகோர்த்து, கூட்டாக போர் முழக்கம் செய்துள்ளன.
வெல்க, தொழிலாளர் - விவசாயிகள் வர்க்க ஒற்றுமை!