headlines

img

மோடி அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை!

பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலையை குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகள் கோரியதை ஒன்றிய பாஜக கூட்டணி அரசு ஏற்கவில்லை. மாறாக, மாநில அரசுகள் தங்களுக்குரிய வரியை குறைக்க வில்லை. அதனால்தான் விலை குறையவில்லை என்று மாநில அரசுகளின் மீது பழி சுமத்தியது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியில் பெரும்பகுதியை ஒன்றிய அரசு வசூலிக்கும் நிலையில் மாநில அரசுகளின் மீது பொறுப்பை சுமத்துகிறது ஒன்றிய அரசு. 

குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலை யொட்டி பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கப் படவில்லை. அதற்கும் சேர்த்து விலை கடுமை யாக ஏற்றப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கேற்பவே பெட்ரோ லியப் பொருட்களின் விலை தீர்மானிக்கப்படு கிறது என்பது தேர்தல் காலத்தில் மட்டும் பொருந்தாது போலும். 

இது ஒருபுறமிருக்க வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து பெட்ரோல் - டீசல் மட்டும் விமான எரிபொருளாக ஏற்றுமதி செய்வதற்கு ஒன்றிய அரசு பிறப்பிக்கும் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடுமை யாக விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறு கின்றன.

ரஷ்யா-உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதன் மூலம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. இப்போது அதன் மீதான வரியும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் லாபம் மேலும் கோடி கோடியாக கொட்டப்போகிறது. உள்நாட்டு மக்களை வஞ்சித்து விட்டு அம்பா னிக்கு சேவை செய்வதுதான் மோடி அரசின் நோக்கம் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணமாகும். 

ரிலையன்ஸ் நிறுவனங்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த போதும் பெட்ரோ லிய சுத்திகரிப்பு மூலமாகவே அதிக லாபத்தை ஈட்டுகின்றன. அம்பானியின் மொத்த வருவாயில் 72 சதவீதம் அளவிற்கு பெட்ரோலிய சுத்திகரிப்பு மூலமாகவே கிடைக்கும் நிலையில் வரி ரத்து இந்த விகிதத்தை மேலும் அதிகரிக்கும். 

அதேநேரத்தில் மோடி அரசு அம்பானிக்கு சலுகை அளிப்பதன் மூலம் பாரபட்சமாக நடக்கி றது என்று நினைக்கக்கூடாது. கவுதம் அதா னிக்கும் தேவையான சேவையை செய்ய தவற வில்லை. மும்பை விமான நிலையத்தை வாங்கு வதற்காக அதானி நிறுவனத்திற்கு ரூ.12 ஆயிரத்து 770 கோடிக்கு   ஸ்டேட் வங்கி உத்தரவாதம் வழங்கி யுள்ளது. தொழில் மேம்பாட்டிற்காக இந்த உதவி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரை வில் இது வராக்கடன் பட்டியலில் சேர்க்கப்படாது என்பதற்காக எந்த உத்தரவாதமும் இல்லை. இவ்வாறாக கார்ப்பரேட்டுகளுக்கு கரசேவை செய்யும் மோடி அரசு மறுபுறத்தில் எளிய மக்க ளுக்கு மானியம் எதுவும் வழங்கக்கூடாது என உபதேசம் செய்கிறது.