headlines

img

மீண்டும் கிளறிவிடப்படும் மதவெறி அரசியல்

உ.பி., மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவ தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீண்டும் மதவெறிப் பிரச்சாரத்தை கையிலெடுத்துள்ளனர். உ.பி,.யில் பாஜக ஆட்சி யின் சாதனைகளை கூறி வாக்கு கேட்க வழியில்லை. 

எனவே மீண்டும் அயோத்தி ராமர் கோவில், மதுரா கிருஷ்ணர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் என கோவில்களைச் சுற்றி மாநில அரசிய லையும், தேசிய அரசியலையும் தள்ளிவிட முயல்கின்றனர். இதன்மூலம் தாங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செய்து வரும் கரசேவையை மக்களிடமிருந்து, மக்களின் கவனத்திலிருந்து மடைமாற்றி விட முயல்கின்றனர். 

உ.பி.,யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அயோத்தியில் கரசேவகர் கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு வாக்க ளிக்கலாமா என்று  அயோத்தி பிரச்சனையை கிளறி விட்டுள்ளார்.

அயோத்தியில் கரசேவை என்ற பெயரில் கூடிய பாஜக . ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் அத்துமீறி வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர். உச்சநீதிமன்றம், தேசிய ஒரு மைப்பாட்டு கவுன்சில் உள்ளிட்ட அமைப்புக ளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி மசூதி கட்டிடங்களை பகிரங்கமாக இடித்துத் தள்ளினர். 

அன்றைய பாஜக தலைவர்கள் எல்.கே.அத் வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி,  அசோக் சிங்கால் உள்ளிட்டவர்கள் தூண்டுத லால் இந்த அராஜகம் அரங்கேறியது. அப்போது ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிலிருந்த நரசிம்மராவ் அரசு இதை வேடிக்கை பார்த்தது. கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு இந்த அராஜகத் திற்கு அனைத்து வகையிலும் துணை நின்றது. கரசேவை என்ற பெயரில் தாங்கள் நினைத்ததை எந்தவித தடையுமில்லாமல் நிறைவேற்றியது ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல்.  

ஆனால் 1990இல் கரசேவகர்கள் மீது சமாஜ்வாதி கட்சி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது என்று பிரச்சனையை திசைதிருப்ப முயல் கிறார் அமித்ஷா. அயோத்தியில் பாபர்மசூதி இடிக் கப்பட்டதைத் தொடர்ந்து மும்பை உள்பட பல்வேறு இடங்களில் மதரீதியான வன்முறைகள் அரங்கேற் றப்பட்டன. இதற்கு காரணமான குற்றச் செயல்க ளுக்கு பாஜகதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் தங்களது கறைபடிந்த கரசேவை அரசியலையே மிகப்பெரிய சாதனை போல முன்வைக்கிறார் அமித்ஷா. மீண்டும் நாட்டை அமளிக்காடாக்கி அதன்மூலம் அதிகாரத்தை தக்க வைக்க முயல்கிறார். யோகிஆதித்ய நாத் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் உ.பி., பின்தங்கிவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாறாக, குற்றவாளிகளை அரசே பாது காக்கிறது, சிறுபான்மை மக்கள் குறிவைத்து அழிக்கப்படுகிறார்கள். உ.பி.,யில் பாஜக அரசை அகற்றுவதன் மூலமே உ.பி., மட்டுமல்ல, இந்தியா வையும் பாதுகாக்க முடியும். மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை எனும் பேரரணை அமைத்து பாஜகவின் வெறிப் பிரச்சாரத்தை தடுத்திட வேண்டும்.