மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் கொதி நிலையின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக, நைஜர், புர்கினோ பசோ, மாலி உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடு களின் ராணுவ தளபதிகள் பகிரங்கமாக அர சியல் பேசி வருகிறார்கள். அவர்கள் பேசுவது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் கடந்த வாரம், ராணுவத்தினர் திடீரென கலகத்தில் ஈடுபட்டு, அந்நாட்டின் ஜனாதிபதி முகமது பஜூமை ஆட்சியிலிருந்து அகற்றினர். வழக்கமாக ராணுவக் கலகம் என்றால், மக்களி டையே அச்சமும், எதிர்ப்பும் இருக்கும். ஆனால், நைஜரில் நடந்த ராணுவக் கலகத்திற்கு அந் நாட்டு மக்கள் பேராதரவு அளித்திருக்கிறார்கள். ராணுவ அதிகாரிகளை வரவேற்று மாபெரும் பேரணிகளை நடத்தி வருகிறார்கள். ஏனென் றால், இந்த ராணுவக் கலகம், ஆண்டாண்டு காலமாக பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டு கிடந்த தங்களது மக்களின் உண்மையான விடுதலைக்கானது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தங்களது நாடுகளிலிருந்து பிரெஞ்சு ராணுவம் வெளி யேற வேண்டும், பிரெஞ்சு அதிகாரிகள் வெளி யேற வேண்டும், பிரான்ஸ் பன்னாட்டு நிறு வனங்கள் அனைத்தும் வெளியேற வேண்டும் என்று வலுவான போராட்டங்கள் நடந்த பின்ன ணியில், மாலி, புர்கினோ பசோ, தற்போது நைஜர் ஆகிய நாடுகளில் மக்கள் ஆதரவுடன் ராணு வத்தினர், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் பிரான்சின் கைக்கூலிகளாக மாறியதால், அவர்களை வெளியேற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.
இத்தகைய பின்னணியில், மேற்கு ஆப்பி ரிக்க நாடுகளில் வலுவாக எழுந்துள்ள ஏகாதி பத்திய எதிர்ப்பு அலை, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கு எரிச்ச லையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் இன்னும் தங்களது சேவகர்களாக இருக்கும் சில நாடு களின் தலைவர்களையும் அமைப்புகளையும் ஏவிவிட்டு, மேற்கண்ட மூன்று நாடுகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். ராணுவத் தால் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நைஜர் ஜனாதிபதி முகமது பஜூமை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தாவிட்டால், நைஜர் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார கூட்ட மைப்பின் மூலமாக மேற்கத்திய ஏகாதிபத்தியம் மிரட்டல் விடுத்துள்ளது. அதற்கு பதிலடியாக நைஜர் ராணுவத் தளபதி, 30 நாட்களுக்குள் நைஜரிலிருந்து பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தின் சுவடுகள் கூட தெரியாத அளவிற்கு முற்றாக வெளியேற வேண்டும் என்று பிரான்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீண்டகாலத்திற்கு பிறகு ஆப்பிரிக்கக் கண் டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தீ பற்றியெரிய துவங்கியிருக்கிறது.