கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார சரிவுகளையும் சவால்களையும் வருவாய் குறைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர வர்க்க பிரிவினர் சந்தித்து வரு கின்றனர். குறிப்பாக உலகின் தொழில் மற்றும் வழங்கல் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள கடுமை யான நெருக்கடிகள் காரணமாக பொருளாதார வீழ்ச்சிகள் தீவிரமடைகின்றன. வேலை வாய்ப்பு களிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள சூழல், உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றங்கள், உணவு தானி யங்களின் பற்றாக்குறை போன்றவை ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைகளை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளன. உக்ரைன் போர் நீடிப்பும் சூழலை மோசமாக்கி வருகிறது.
இத்தகைய நடைமுறை சூழலில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் காரண மாக உருவாகி உள்ள கருங்கடல் உணவு தானிய முன்னெடுப்புத் திட்டம் மூலமாக உலகம் முழு வதும் உணவு தானியங்களை, பொருட்களை கடல் வழியாக பாதுகாப்பாக கொண்டுசென்று உலக மக்களின் உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சி பாராட்டுக்குரியது. இதன் மூல மாக பல நாடுகளில் ஏற்பட உள்ள உணவுப்பற்றாக் குறை தவிர்க்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சர்வதேச கருங்கடல் உணவு தானிய முன்னெடுப்புகளில் சர்வதேச உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் மக்கள் சீனத்தின் முன்னெடுப்புகளும், உறுதிப்பாடும் வரவேற்கத்தக்கதாகும். போர் காரணமாக, உக்ரைனிலிருந்து வெளியில் கொண்டு செல்ல முடியாத கோதுமை உள்ளிட்ட உணவு தானி யங்களை எடுத்துச் செல்வதே கருங்கடல் உணவு தானியத் திட்டம் ஆகும். இதுதொடர்பாக ஏப்ரல் 26 அன்று சீன ஜனாதிபதி ஜின்பிங், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் பேச்சு நடத்தி, உணவு தானியங்களை வெளியில் கொண்டு செல்வதற்கான உறுதியை அளித்துள்ளார்.
சீனாவின் பாதையில், பேச்சுவார்த்தைகள் வாயிலாக சர்வதேச மற்றும் தேசிய பிரச்சனை களுக்கு உரிய தீர்வுகளை காண்பதும், அனைத்து நாடுகளின் இறையாண்மையை மதித்து செயல்படுவதன் வாயிலாக மனிதநேய சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து வளரும் மற்றும் வளம் குறைந்த நாடுகளில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள், பெண்கள், குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளின் உணவு மற்றும் ஊட்டச் சத்து பாதுகாப்புகளை நிறைவு செய்யவும் புதிய ஆக்கப்பூர்வமான சர்வதேச பொருளாதார கூட் டுறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளை மேற் கொள்ள வேண்டியது இன்றைய முக்கிய தேவையாகும்.
தற்போது இந்தியா ஜி20 நாடுகளுக்கு தலைமை ஏற்று உள்ள சூழலில் நமது நாட்டில் உள்ள பெருவாரியான உழைக்கும் மக்களின் பொருளாதார நலன்கள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தற்போதைய உக்ரைன் போர் சூழல், போருக்கு பிந்தைய தொழில் மற்றும் வேளாண் துறைகளின் மீட்டுருவாக்கம் பற்றிய ஆக்கப் பூர்வமான சிந்தனைகளை அனைத்து வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமும் உடனடி தேவையும் ஆகும்.