headlines

img

காரல் மார்க்ஸ் பற்றி பேச ஆளுநருக்கு தகுதி உள்ளதா?

தமிழ்நாடு ஆளுநர் நாள்தோறும் ஏதாவது உளறிக் கொட்ட வேண்டும் என்பதை ஒரு கட மையாக கொண்டிருப்பார் போலும்.  “குடும்பமாக இருப்பதிலும் சமூகமாக இருப்பதிலும் காரல் மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.. ஏனென்றால் தனிமனித வளர்ச்சியை குடும்பம் தடுக்கும் என்று அவர் நம்பினார். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல”- என்று ஒரு நூல்வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

மார்க்ஸ் அவர்கள் குடும்பத்தையோ அல்லது சமூகத்தையோ சிறுமைப்படுத்தி எங்கே யும் எப்பொழுதும் பேசியதும் இல்லை; எழுதிய தும் இல்லை. மாறாக குடும்பம் மற்றும் சமூகம் குறித்தும் அவை மனிதன் வாழ்வில் உருவாக்கும் தாக்கங்கள் குறித்தும் அளப்பரிய நம்பிக்கையை கொண்டிருந்தார். அதனால்தான் சமூக மாற்றம் தேவை எனும் முடிவுக்கும் வந்தார். இவையெல் லாம் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்களுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்?

மார்க்ஸ் அவர்கள் தனது மனைவியை காதலித்துத்தான் திருமணம் செய்துகொண்டார் என்பதை ரவி அறிவாரா? பிரஷ்ய அரச குடும் பத்தில் பிறந்த ஜென்னி தனது காதலன் மார்க்சுக் காக ஆடம்பர வாழ்வை துறந்து அவருடன் இன் னல்களும் அடக்குமுறைகளும் நிறைந்த வாழ்வில் ஒன்றாக பயணித்தார் என்பது ரவிக்கு தெரியுமா?

வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ரசித்தவர் மட்டுமல்ல; பல அடக்குமுறைகள் தந்த வலிகளுக்கு இடையேயும் அந்த ரசனை யை மார்க்ஸ் கை விட்டது இல்லை. அதில் அவருக்கு பக்கபலமாக இருந்தது அவர் குடும் பம்தான்! மார்க்ஸ் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார். தனது காதல் மனைவியும் அவரது மூன்று புதல்விகள் ஜென்னி/லாவ்ரா/எலனோர் ஆகியோரும் சக குடும்ப உறுப்பினர்கள் மட்டு மல்ல; சக இயக்க போராளிகளும் கூட! இவர்களு டன் இணைக்க வேண்டிய இன்னொரு மகத் தான பெயர் பிரடெரிக் ஏங்க்கெல்ஸ். 

சமூகத்தையும் வேண்டாம் என மார்க்ஸ் நினைத்ததாக ஆர்.என்.ரவி கூறுகிறார். இதை விட கேடுகெட்ட பொய் எதுவும் இருக்க இயலாது. காரல் மார்க்ஸ் (ஏங்கெல்சுடன் இணைந்து) உரு வாக்கிய மிகப்பெரிய கோட்பாடே சமூகத்தை பற்றியதுதானே! “சமூக வாழ்வே சமூக சிந்தனை யை நிர்ணயிக்கிறது. சமூக சிந்தனை சமூக வாழ்வை நிர்ணயிக்கவில்லை” எனும் மகத்தான பொருள்முதல்வாத கருத்தை சமூகத்துக்கு பொருத்தியவர் காரல் மார்க்ஸ். 

ஆனால் ஒரு வகையில் ஆர்.என்.ரவி  சொன்னது சரிதான்! மார்க்ஸ், சமூகம் வேண்டாம் என்று சொன்னார். ஆனால் எந்த சமூகத்தை? முதலாளித்துவ சமூகத்தை வேண்டாம் எனவும் அதற்கு சமாதி கட்ட வேண்டும் எனவும் சோச லிச சமூகம் படைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். மார்க்சின் வழியில் அதை உரக்கச் சொல்வதில் உழைப்பாளிகளுக்கு எந்த தயக்க மும் இருக்காது. ஆனால் ஆளுநர் தனது கருத்துகள் மூலம் மேலும் மேலும் நகைப்புக்கு ஆளாகிறார் என்பதே உண்மை.