ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும். இந்த மோதல் காரணமாக உலகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்யா எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணத்தை யும் எளிதாக புறந்தள்ளிவிடமுடியாது.
கடந்த எட்டு ஆண்டுகளாக உக்ரைன் ஆத்திர மூட்டும் வகையில் நடந்துகொண்ட போதிலும் ரஷ்யா நிதானத்தை கடைப்பிடித்தது. கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பிரதேசத்தில் ரஷ்ய மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்கள் மீது உக்ரைன் ராணுவமும் அரசு நிர்வாகம் கடுமையான ஒடுக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இனியும் அந்த பகுதிகளில் ரத்த ஆறு ஓடக்கூடாது என கருதி ரஷ்யா அம்மக்களை பாதுகாக்க உக்ரைனுக்குள் நுழைந்துள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீன ஆயுதங்களும் புதுமையான போர் உத்திகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்தநிலையில் மோதல் என்பது பிரச்சனைக்கு தீர்வாகாது. சோவி யத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு, ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு மாறாக, அமெ ரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவம் படிப் படியாக கிழக்கு நோக்கி விரிவடைந்து வருகிறது. உக்ரைனை நேட்டோவில் இணைக்க மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சி ரஷ்யாவின் பாது காப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவை ஒட்டியுள்ள ரஷ்ய எல்லையில் நேட்டோ படைகள் மற்றும் ஏவு கணைகள் இருப்பதால் தனது பாதுகாப்பு குறித்து ரஷ்யா கொண்டுள்ள கவலையை உலக நாடுகள் புரிந்து கொள்ளவேண்டும். உக்ரைனை நேட்டோ வில் சேர்த்துக்கொள்ளக்கூடாது, ரஷ்யாவுக்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தப் பட்டுள்ள ஏவகணைகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட உத்தரவாதத்தை நேட்டோ விடம் ரஷ்யா கோருகிறது.
இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலிப்ப தற்கு பதில் ரஷ்யாவை தனிமைப்படுத்த அந்நாட்டு க்கு எதிராக உக்ரைனை கொம்புசீவி விடும் மேற் கத்திய நாடுகளின் செயல் அமைதியை சீர் குலைத்து விடும். ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதியை நிலைநாட்டுவதற்கு, கிழக்கு உக் ரைனில் உள்ள டான்பாஸ் பகுதி உட்பட அனைத்து மக்களின் உண்மையான கவலைகள் கவ னிக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை வாயிலாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும். இரு தரப்பினரும் முன்பு செய்துகொண்ட ஒப்பந்தங்களு க்கு உட்பட்டு நடந்துகொள்ளவேண்டும்.
ரஷ்யா- உக்ரைன் இடையிலான மோதல் காரணமாக உக்ரைன் மேற்குப் பகுதியில் மருத்து வம் உள்ளிட்ட உயர்கல்வி கற்க சென்றுள்ள தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய நாடு திரும்ப முடி யாமல் அவதிப்படுகின்றனர். கோவிட் 19 தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது உலகில் பல்வேறு நாடு களில் சிக்கிய இந்தியர்களை ஒன்றிய அரசு வந்தே பாரத் என்ற பெயரில் ஏர் இந்தியா விமானம் மூல மாக மீட்டது. தற்போது ஏற்பட்டுள்ள துயரமான சூழ லில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்க ளை ஒன்றிய அரசு துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.