இந்தியா வல்லரசாக மத்தியில் பாஜக அரசு தொடர வேண்டும் என்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்களன்று இராஜபாளையத்தில் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவை காலூன்றச் செய்திட வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் போன்றவர்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரோடு ஷோ நடத்து கிறார்கள். தமிழ் மக்கள் மீது பாசமழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.
மழை வெள்ளம் - புயல் பாதித்த போது வந்து சென்ற ராஜ்நாத் சிங் இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார். வெறும் வாய்ச் சொற்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். இப்போதும் கூட மறந்தும் நிவாரண நிதி பற்றி பேசவில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் சேர்த்து பாஜகவை ஏப். 19 அன்று நன்றாகக் கவனிப்பார்கள்.
கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி அதிசயம் நிகழ்த்தினார் என்று அண்மை யில் காஜியாபாத்தில் பேசியிருக்கிறார் ராஜ்நாத் சிங். அப்படி என்ன அதிசயம் என்பதை அவர் சொல்லவில்லை.
ஒன்றிய ஆளும் கட்சியின் தலைவர்களும் அமைச்சர்களும் ஆர்டிஐ தகவல் என்று கூறி ‘கச்சத்தீவு’ பூனைக்குட்டியை வெளியே விட்டார்கள். ஆனால் அதுவும் போலியானது என்பது நிரூபணமாகி அவர்களுக்கே பூமராங் ஆகிவிட்டது. பத்தாண்டு கால ஆட்சியில் கச்சத்தீவை திருப்பித் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்து திரும்பப் பெற்றிருந்தால் அது ‘அதிசயம்’ ஆக இருந்திருக்கும்.
ஆனால் இவர் கூறும் அந்த அதிசயம்தான் என்ன? ஒரு நாடு வல்லரசாவதை விட நல்லரசாவதே சிறந்தது. அதுவே வரலாற்றில் நிலைக்கும். ஹிட்லரின் பெயர் கூட வரலாற்றில் நிலைத்திருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது அவப்பெயர். அதேவேளை உலக யுத்தத்தி லிருந்து - அழிவின் விளிம்பிலிருந்து உல கைக் காத்த மாவீரன் ஜோசப் ஸ்டாலின் பெய ரும் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றிருக் கிறது. எனவே, எதற்காக வரலாற்றில் நிலைத் திருக்கிறார்கள் என்பது முக்கியம்.
அதுபோல் வல்லரசு என்பதைவிட நல்லரசாகத் திகழ்வதே நாளைய வரலாற்றில் புகழுடன் நிலைத்திருக்கும். இந்தியா இத்தகைய பெயர் பெறுவதே நல்லது. ஆனால் பிரதமர் மோடி யின் ஆட்சி அத்தகைய பெயரையா பெற்றிருக் கிறது? அவப்பெயர் அல்லவா கிடைத்திருக்கிறது!
18ஆவது மக்களவைத் தேர்தல் நடக்கவிருக் கிறது. ஆனால் ஓராண்டாகியும் மணிப்பூரில் சொந்த மக்கள் அகதிகள் போல நிவாரண முகாம் களில் தங்கியிருக்கிறார்கள். 24,500 பேர் வாக் களிக்க அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது ஒன்றிய ஆட்சிக்கு கேவலம் இல்லையா? இத்தகைய வல்லரசு நாட்டுக்குத் தேவையில்லை. அனைவரும் இயல்பாகவும் நல்லிணக்கத்துட னும் வாழ்க்கை நடத்தும் சூழலை ஏற்படுத்தும் நல்லரசே தேவை. வரும் மக்களவைத் தேர்தல் அதை உருவாக்கட்டும்! கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!