‘எங்கே எனது வேலை’ என்ற கேள்வியுடன் நவம்பர் 3 அன்று புதுதில்லியில் பல்லாயிரக்க ணக்கான இளைஞர்கள் எழுச்சிமிக்க போராட் டத்தை நடத்தியிருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டு காலமாக மோடி அரசிடம் இந்த கேள்வியை ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடியிடம் வெற்று வாய்ப்பந்தலை தவிர வேறு உருப்படி யான பதில் இல்லை.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. கடந்த 6 மாத காலத்தில் மட்டும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் 150 லட்சம் பேருக்கு வேலை மறுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் விலைவாசி, மேலும் மேலும் அதிகமான மக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. இதன்விளைவாக உலக அளவில் கடும் பட்டினியில் உள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியாவில் உள்ள தாக புதிய விபரங்கள் கூறுகின்றன.
ஆனால் பிரதமர் நரேந்திரமோடியோ, தங்க ளது ஆட்சிதான் உண்மையிலேயே வறுமையை ஒழித்துக் கொண்டிருக்கிறது என்றும், தமது அரசின் கொள்கைகள் பிரதானமாக வறுமை ஒழிப்பை அடிப்படையாக கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அப்படி பேசிய ஓரிரு தினங்களில்தான், தில்லியில் இளைஞர்களின் அந்தப் பேரணி நடந்துள்ளது. பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் வாக்குறுதி அளித்த எனது வேலைவாய்ப்பு எங்கே? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.
வேலைவாய்ப்பை உருவாக்கி வறுமையை போக்கும் விதத்தில் மோடி அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் அமையவில்லை. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய தொழிற்துறை வளர்ச்சி மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மைனஸ் 0.8 சதவீதம் என்ற அளவிற்கு தலைகீழ் விகிதத்தில் தொழிற்துறை வீழ்ந்து கொண்டிருக்கிறது. பிரதானமான 8 துறை களில் கடந்த ஆண்டு 19.4 சதவீதம் என்று இருந்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் நடப்பாண்டு 9.8 சத வீதம் என்ற அளவிற்கு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஜூனில் பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் வேலை வழங்கி விடுவோம் என்று நீட்டி முழக்கினார். குஜராத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு நிகழ்வில் தான் இந்த வாக்குறு தியை அவர் அளித்தார். இதே வாக்குறுதி யைத்தான் 2014 முதல் இடைவிடாமல் அவர் அளிக்கிறார். ஆனால் இப்போதும் கூட ஒன்றிய அரசின் துறைகளில் உடனடியாக 8 லட்சத்து 72 ஆயிரத்து 243 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்பினாலே மோடியின் கடைசி வாக்கு றுதியில் கணிசமான எண்ணிக்கையை நிறை வேற்றி விட முடியும். ஆனால் அதற்கான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாக வில்லை. எனவே, 2014 இல் மோடி அளித்த, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு போன்ற தேர்தல் கால மோசடி வாக்குறுதிகளை இனியும் இந்திய இளைஞர்கள் நம்பத் தயாராக இல்லை.