headlines

img

நீட் ஒரு பெரும் வணிகம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஏதாவது ஒரு குழந்தை நீட்  தேர்வுக்கு எதிராக இருக்கிறதா? யாருமே நீட்  தேர்வுக்கு எதிராக இல்லை” என கூறியுள்ளார். 

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு கட்டாய மாக்கியது. அதனால்தான் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்த  கையுடன் நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங் களில் பயின்று தேர்வுகளை எழுதி வருகிறார்கள். 

நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக வசதி  படைத்த மாணவர்கள் தனியார் நடத்தும் பயிற்சி மையத்திற்கு செல்கிறார்கள். ஒவ்வொரு மாணவரும் குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. ஏழைகள் எட்டிப்பார்க்க முடியவில்லை. பயிற்சி மையங்கள் குறைந்தது ரூ.12 ஆயிரம் கோடி வருமானம்ஈட்டுகின்றன.

நீட் தேர்வால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தற் கொலை செய்துகொண்டுள்ளனர். இராஜஸ்தா னில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட வர்கள் எண்ணிக்கை (2023)-ஆம்ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 23-ஆக  உள்ளது. இது கடந்த எட்டாண்டுகளை விட மிக அதிகம்.

நீட் தேர்வால் 2015- ஆம் ஆண்டில் 17 பேர்,  2016-ல் 16, 2017-ல் 7 பேர், 2018-ல் 20 பேர் 2019-ல் 8 பேர், 2020-ல் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2021-ல் கொரோனா தொற்று பரவலால் நிறுவனங்கள் மூடப்பட்டன. 2022-ஆம் ஆண்டில் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். நீட்தேர்வால்  தற்கொலை நடக்கிறது என்பதை  மறைத்துவிட்டு நீட் தேர்வை தமிழகம்  ஏற்றுக்கொண்டுவிட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.  ஒன்றிய பாஜக அரசு ஒட்டுமொத்த கல்வித் துறையையும் பெரும் வணிகமாக மாற்றத் துடிக்கிறது. கல்வி என்பது முதலாளித்துவ உலகில் டிரில்லியன் டாலர் வணிகமாக மாற்றப் பட்டு வருகிறது. அதை இன்னும் வேகப்படுத்தும் விதமாக, கல்வியை முழுமையான வணிகமய மாக்குவது; மதவெறி மயமாக்குவது; மாநி லங்களின் அதிகாரங்களைப் பறித்து கல்வியை முற்றிலும் ஒன்றிய அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டுவருவது ஆகிய மூன்று செயல்திட்டங்களுடன் மோடி அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாகத்தான் நீட் உள்பட பலவிதமான நுழைவுத் தேர்வுகளை மிகக் கடு மையான முறையில், விடாப்பிடியாக திணித்து, அமலாக்கியுள்ளது. இது கல்வியில் ஜன நாயகத்தை அழித்து, எதேச்சதிகாரத்தின் கொடிய பிடிக்குள் கல்வியை சிக்க வைத்திருக் கும் வியூகமாகும். எனவே நீட் என்பது மாணவர் சமுதாயத்தின் மீதான கொடிய தாக்குதலே!