சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் மக்களுக்கு நோய் உண்டாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக் குடி மாவட்ட மக்கள் நடத்திய அமைதியான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 உயிர்க ளை பலிகொண்ட கொடூரம் தொடர்பாக விசா ரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமர்ப்பித்து சில நட வடிக்கைகளையும் அறிவித்துள்ளது வரவேற் கத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழ லுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தாலேயே அந்த மக்கள் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். அதனை அன்றைய மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் நியாயமான முறையில் அணுகாமல் ஸ்டெர் லைட் நிறுவனத்திற்கு ஆதரவாகவே நடந்து கொண்டதால்தான் அமைதியாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய கொடுமை நிகழ்ந்தது.
இந்த கொடுமைகளுக்கு காரணமான மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது ஆணையம் பரிந்துரைத்த படி விசாரணை நடத்துவது, நடவடிக்கை எடுப்பது அவசியம். எனினும் இதற்கு மூலகாரணமாக அமைந்த ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மீதும், காவல் துறைக்கு பொறுப்பாகவும் இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமா கும். எனவே இவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிக்கையை முன்வைத்து பேசிய முதல்வர், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு மேலும் ஐந்து லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள் ளார். அத்துடன் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு மூலக் காரணமாக இருந்த, விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டியதே அந்த மக்களின் கோரிக் கையாகும். இதனை நிறைவேற்றுவது தமிழக அரசின் கடமையுமாகும்.
ஸ்டெர்லைட் ஆலை அத்துமீறலில் ஈடுபட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதை எதிர்த்து செய் யப்பட்ட முறையீடுகளின் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந் தால் இத்தகைய உயிர்ப்பலி சம்பவம் நிகழ்ந்தி ருக்காது. எனவே மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசிய மாகும்.
ஒரு ஆலை துவங்கப்பட்டால் அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ப தால் அது வரவேற்கப்படும். ஆனால் இங்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி போ ராட்டம் நடத்தியதே அதனால் பயனைவிட பாதிப்பே ஏற்பட்டது என்பதனால்தான், அதனை எதிர்த்து தொடர்ந்து போராடினர். எனவே குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது எத்தனை முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் முடிவாகும்.