headlines

img

மாட்டிறைச்சி அரசியல்

கோவையில் மாட்டிறைச்சி விற்கக்கூடாது என்று சாலையோர பெண் வியாபாரி ஒருவரை பாஜக நிர்வாகி மிரட்டியிருக்கிறார்.  இதனால்  பயந்துபோன அந்தப்பெண் தனது கடையை மற் றொரு இடத்திற்கு மாற்றியிருக்கிறார். அதன் பின்ன ரும் மிரட்டல் நிற்கவில்லை.  வட இந்தியாவைப் போன்ற ஒரு பதற்றமான சூழலை தமிழகத்தில் ஏற் படுத்த பாஜகவினரும் அக்கட்சியின் துணை அமைப்புகளும் முயற்சிக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள் தலையிட்டதால் பாஜக நிர்வாகிமீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது வரவேற் கத்தக்கது. மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்பதற் காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கொடுமை யானது.

ஹரியானாவில் கடந்தாண்டு செப்டம்பர்  2 ஆம் தேதி பசுமாட்டினை கடத்திச் செல்வதாக பழி சுமத்தி, பிளஸ் 2 படிக்கும் பள்ளி  மாணவனை, பசுக் குண்டர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதே மாநிலத்தின் சர்க்கி தாத்ரி பகுதியில் கடந்தா ண்டு ஆகஸ்ட்  27 அன்று மாட்டிறைச்சி உண்டதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்  இளைஞ ரான புலம் பெயர் தொழிலாளி சபீராவை (26) ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் அடித்துக் கொன்றனர். 2022  மே மாதம் 4 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்தி ருந்ததாகக் கூறி பழங்குடியினர் ஒருவரது வீட்டி ற்குச் சென்று அவரை பஜ்ரங்தள் குண்டர்கள்  தாக்கியதில் அவர் உயிரிழந்தார். 2017 ஜூன் மாதம் தில்லியில் உள்ள கேரள மாநில இல்லத்தில் மாட்டிறைச்சி வழங்கப்படுவதாக கூறி, பாஜகவி னர் தில்லியை வன்முறைக் களமாக மாற்றினர்.  

இந்தியாவில் மக்கள் வழிபாட்டு முறையை தங்களுக்கு ஏற்ற முறைகளில் அமைத்துக்கொள் கிறார்கள். ஆனால் மதவெறியர்கள் உணவு வாயி லாக  மக்களையும் கடவுளையும் பிளவுபடுத்துகி றார்கள். அசைவம் சாப்பிட்டால் அறிவு குறைவு என்பதை போலவும், சைவம் சாப்பிட்டால் அறி வாளி என்பதை போன்ற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்த முயன்று தோல்வியடைந்தவர்கள் தான் இவர்கள். இருப்பினும் அவர்களுக்கான அடையாள அரசியலாக மாட்டிறைச்சியை பயன் படுத்திக் கொள்கிறார்கள். பண்டைய இந்தியா வில் மாட்டிறைச்சியை அனைத்து மக்களும் உண்டதற்கான ஏராளமான ஆதாரங்கள், வேதங் கள் முதல் மகாபாரதம் வரை காணப்படுகின்றன. மாட்டிறைச்சியை  கடவுளுக்கு படைத்திருக்கிறார் கள். எனவே வேதகாலம் முதல் நவீன காலம் வரை மாட்டிறைச்சி என்பது இந்திய மக்களின் அன்றாட உணவாகவே இருக்கிறது. 

இளைஞர்கள் உடல்வலிமை பெற மாட்டிறைச் சியை உண்ணவேண்டும் என்று சுவாமி விவேகா னந்தர் கூறினார். இவை அனைத்தும் தெரிந்தும் பாஜவினர் தங்களது ஆதாய அரசியலுக்காக பசுவை பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே வடஇந்தியாவைப் போன்று மாட்டிறைச்சி தடை என்ற போர்வையில் பாஜகவினர் தமிழகத்தை  வன்முறைக் களமாக மாற்ற முயற்சிப்பதை காவல்துறையும் மாநில அரசும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.