headlines

img

வாய்ப்பந்தல் பொருளாதாரம்!

பிரதமர்  மோடி 2025க்குள் இந்தியா 5 டிரில்லி யன் பொருளாதாரத்தை எட்டும் என மார்தட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரு கிறது. கடந்த புதன்கிழமையன்று ரூ.83.24 ஆக வீழ்ச்சி யடைந்திருந்தது. தனிநபர் ஜிடிபி வளர்ச்சியில் இந்தியா 142 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டி ருக்கிறது. 

மோடி பிரதமரானால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 40க்கு வந்து விடும் என ஸ்ரீ ஸ்ரீ  ரவிசங்கர் துவங்கி பலரும் பல்லக்கு தூக்கினர். அவர்கள் எல்லாம் தற்போது இந்தி யாவில்தான் இருக்கிறார்களா என்று தெரிய வில்லை. நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது 2013ஆம் ஆண்டு தனது டிவிட்டர் பக்கத்தில், “டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு தில்லியிலிருந்து ஆளும் அரசின் ஊழல்கள் தான் காரணம்”எனப் பதிவிட்டி ருந்தார். இப்போது வீழ்ச்சியடைந்து வருவதற்கு எந்த ஊழல் காரணம் என மோடி விளக்குவாரா?

தற்போதைய ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி 2013-ல் தனது டிவிட்டர் பக் கத்தில், “சீன ஊடுருவல், பெட்ரோல் விலை  ஏற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, 60% இந்தியர்கள் உணவிற்காக போராடும் போது, இதை மறைக்கக் காங்கிரஸ் மதச்சார்பின்மை குறித்துப் பேசிவரு கின்றது” எனப் பதிவிட்டிருந்தார்.  இப்போது மேற் சொன்ன விஷயங்கள் அனைத்தும் என்ன லட்ச ணத்தில் இருக்கிறது என ஸ்மிருதி இரானி விளக்குவாரா?

2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. 2014-க்கு முன்பு இந்தியாவை 67 ஆண்டுகளாக 14 பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த 67 ஆண்டு களில் இந்தியாவின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. ஆனால், 2014-க்கு பின் கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியில்   இந்தியாவின் கடன் 172 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.  சுமார் இரண்டரை மடங்கு அதிகரித்ததற்கு யார் பொறுப்பு?

மோடியின் பொருளாதாரப் பொய்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவிற்குமானதாக இருக்கிறது. அரசு - தனியார் முதலீடு அதிகரிக்கிறது; மேக் இன் இந்தியா மூலம் இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற மோடியின் வாய்ப்பந்த லில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது. மேக் இன் இந்தியா 72.5 சதவிகிதமும், அரசு மற்றும் தனியார் முதலீடு 79.2 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்புக்க ளைத் தந்து கொண்டிருக்கும் ஆயத்த ஆடைகள், கடல் பொருட்கள், பிளாஸ்டிக், ஆபரணங்கள், செயற்கை கற்கள்  உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி கடும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதில் எப்படி 2025க்குள் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட முடியும் ?