கர்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசு ஆட்சிக்கு வருவதை மக்கள் உறுதிப்படுத்தி னால் 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்று ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா தும்கூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
மே 10இல் நடைபெறவுள்ள கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும் கட்சி என்ற அந்தஸ்து கூட கிடைக்காது என்பதை பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின் றன. 60 தொகுதிகள் கூட கிடைக்காது என்று ஓர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 130 முதல் 157 இடங்கள் வரை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்தான் அமித்ஷா எப்படியாவது பெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரட்டை என்ஜின் பேச்சை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது ஆட்சியிலி ருக்கும் பசவராஜ் பொம்மை அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்று அவக்கேடான பெயரை பெற்றுள்ளது. இந்த அரசின் சாதனைகள் என்று எதையும் கூறுவதற்கு அவர்கள் கைவசம் எந்த சரக்கும் இல்லை. அதனால்தான் இரட்டை என்ஜின் என்று கூறி மோடியை தூக்கி முன்னே வைக்கிறார்கள்.
அண்மையில் பிரதமர் மோடி இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவை என்று கூறி யிருந்தார். ஆனால் திங்களன்று பாஜக வெளி யிட்ட தேர்தல் அறிக்கையில் இலவச பால், இலவச கேஸ் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது.
அத்துடன் வழக்கமான வகுப்புவாத நட வடிக்கைகள் மூலம் இந்து வாக்குகளை திரட்டுவ தற்கான வேலையையும் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்றும், கர்நாடகத்தில் புதி தாக மத அடிப்படை வாதம் மற்றும் தீவிரவாதத்தி ற்கு எதிரான படை அமைக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால் கலவரம் தான் ஏற்படும் என்று அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டி யிருந்தார். அதாவது எங்களை தேர்ந்தெடுக்கா விட்டால் எங்கள் பரிவாரங்கள் மாநிலத்தில் வன்முறையிலும், கலவரங்களிலும் ஈடுபடும் என்பதே அதன் பொருள். எப்படியாவது வெற்றி பெற வேண்டும். ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதே அவர்களது ஒரே குறிக்கோளாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தல்க ளில் பாஜக தோல்வியை சந்தித்ததை மனதில் கொண்டே, இப்பொழுது வெற்றி பெறவில்லை யென்றால் அதன் விளைவு 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற அச்சமே அவர்களை ஆட்டிப் படைக்கிறது. என்றாலும், கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி உறுதி செய் யப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. அது 2024இல் மத்தியிலும் மோடி ஆட்சி மீண்டும் வரப் போவ தில்லை என்பதற்கு முன்னோட்டமாகவும் திகழ்ந்திடும்.