headlines

img

ஆளுநரின் அத்துமீறல்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்த பின் அனுமதி தருவதாகச் சட்ட அமைச்சர் ரகுபதி யிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி  உறுதியளித்தி ருந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு சம்மேளன நிர்வாகிகளை அவர் சந்தித்துப்பேசி யது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். பொதுவாக ஆளுநரைச் சந்திக்கும் பிரமுகர்கள் குறித்த புகைப்படம் மற்றும் செய்தி ஆளுநர் மாளிகை யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளி யிடப்படுவது வழக்கம்.  இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.  இதிலிருந்தே இந்த சந்திப்பு குறித்து எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதில் நியாயம் இருக்கிறது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில்  லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்து இது வரை 34 பேர் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் மக்கள் நலன் கருதி தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்ட விளையாட்டு களைத் தடை செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.  ஆளுநர் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப்பட்ட அந்த மசோதா வுக்கு அவர் வேண்டுமென்றே அனுமதி வழங்கா மல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த மசோதா குறித்து ஆளுநருக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதைத் தீர்த்து வைக்கவும் தயார் என்று மாநில அரசு கூறியது. மாநில சட்ட அமைச்சர் ரகுபதி கடந்த 1 ஆம்தேதி ஆளு நரை நேரில் சந்தித்து பொதுநலன் கருதி மசோதா வுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது கூட ஆளுநருக்கு இந்த மசோதா குறித்து இருந்த ஐயப்பாடுகளுக்கு அவர் விளக்கமளித்தார். இதன் பின்னரும் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. ஆளுநரின் நடவடிக்கைகள் அரசி யல் சார்ந்து இருப்பதாக அதிமுக, பாஜக நீங்கலாக அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டிய பின்னரும் அவர் தனது நிலையை மாற்றியதாகத் தெரியவில்லை.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்க ளுக்குப் பிரதமர் மோடி சேவகம் செய்வதைப் போல் ஆளுநர் ரவி மத்திய அரசின் ஆசியுடன் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறாரோ என்று சந்தேகப் படவேண்டியுள்ளது.  இந்த சந்தேகத்தை உறுதிப் படுத்தும் வகையில் அவர் ஆன்லைன் விளை யாட்டு நிறுவன சம்மேளன நிர்வாகிகளை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசியதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அவர்கள் எந்த மாதிரி யான கோரிக்கையை ஆளுநரிடம் வைப்பார்கள் என்பது அவருக்குத் தெரியாதது அல்ல. ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒரு அறிவுப் பூர்வமான விளையாட்டு என்பதே அந்த நிறுவனங்க ளின் வாதம். இதையே தான் அவர்கள் உயர்நீதி மன்றத்திலும் தெரிவித்துள்ளனர். அப்பாவி மக்க ளின் பணத்தைச் சுரண்டி கொழுத்துக்கொண்டி ருக்கும் இந்த நிறுவனங்களுக்குக் கடிவாளம் இடு வதில் தான் ஆளுநர் முனைப்புக்காட்ட வேண்டுமே தவிர பரிவு காட்டுவதில் அல்ல.