headlines

img

வெறும் வதந்தி அல்ல!

1949 செப்டம்பர் 18 அன்று, அரசியல மைப்பின் வரைவு பிரிவு 1(1), மாநிலங்களின் ஒன்றியத்தை “இந்தியா, அதாவது பாரத்” என்று குறிப்பிட்டது. முன்னதாக நாட்டின் பெயர் தொடர்பான விவாதம், அரசியல் நிர்ணய சபை யில், 1948 நவம்பர் 17 அன்று துவங்கியது. 1949 செப்டம்பர் 17 அன்று, டாக்டர் அம்பேத்கர், அரசி யலமைப்பு பிரிவு 1 தொடர்பாக, இறுதி செய்யப் பட்ட வரைவை, நாடாளுமன்றத்தில் சமர்ப் பித்தபோது, ‘பாரத்’ என்று எங்கும் குறிப்பிட வில்லை. ‘இந்தியா’ என்றே இருந்தது. 

பலரும் பல பெயர்களை முன்மொழிந்த னர். வைதீக மதப் பெயர்களை அடையாளப் படுத்தும் வகையில், விஷ்ணு பூரண, பிரம்ம பூரண என்பதைக் குறிக்கும் ’பாரத்’ என்ற பெயரை சூட்ட வேண்டும்; பாரத், பாரத் வர்ஷா, பாரத் பூமி என்ற பெயர்களை பரிந்துரைத்தனர். ஆனால், பெரும்பாலானோர் ‘இந்தியா’ என்ற பெயரை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, ‘இந்தியா அதாவது பாரதம்’ என்று அரசியல மைப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டது. 

முன்னதாக, ‘பாரத்’ என்ற சொல் ‘இந்தியா’ என்ற சொல்லுக்கு பின்பு வர வேண்டும் என்ப தற்காக இவ்வளவு விவாதம் தேவையா என்று கேட்ட டாக்டர் அம்பேத்கர், பெயர் பிரச்ச னையை விடுத்து, “நாம் செய்ய வேண்டிய பணி எவ்வளவு இருக்கிறது..” என்பதையும் தலைவர்களுக்குச் சுட்டிக்காட்டி, விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

ஆனால், சுமார் 76 ஆண்டுகள் கழித்து, இப்பிரச்சனையை திட்டமிட்டு, இப்போது முன்னுக்கு கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.  கடும் எதிர்ப்பு எழுந்த பின்னணியில், ‘இந்தியா’ என்ற நாட்டின் பெயரை மாற்றுவதாக வெளி யான செய்திகள் வதந்தி மட்டுமே” என, ஒன்றிய பாஜக அரசு தற்போது கூறியுள்ளது. 

இந்தியாவை நீக்கி விட்டு, பாரத் என்பதை மட்டும் இடம்பெறச் செய்ய வேண்டுமானால், அரசியலமைப்பு சட்டம் 1-இல் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு இந்திய அரசியலமைப்பின் 368-ஆவது பிரிவு வழி காட்டுகிறது. இதன்படி, இந்திய அரசியல மைப்பு சட்டப்பிரிவு 1-இல் மாற்றம் செய்வதைப் பொறுத்தவரை, அதனை சிறப்புப் பெரும் பான்மைத் திருத்தம் (Special Majority Amend ment) முறையிலேயே செய்ய முடியும். 

நாடாளுமன்றத்தில் 66 சதவிகிதம் பேர்- அதாவது 3-இல் 2 பங்கு உறுப்பினர்கள் மசோதா வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அதனை உணர்ந்துதான், அமைச்சர் அனுராக் தாக்குர், ‘பெயர் மாற்றம் வதந்தி’ என்று கூறி யுள்ளார். “இந்தியா என்ற பெயரை யார் கை விட்டது... யாரும் அதை கைவிடவில்லை” என்று, ஏதோ தேசபக்தி கொண்டவர் போல கூறி யுள்ளார். ஆனால், மூன்றில் 2 பங்கு பெரும் பான்மை கிடைக்குமானால், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மட்டுமல்ல, பாஜக என்றும் கூட இவர்கள் மாற்றுவார்கள் என்பதுதான் உண்மை.