ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் மருத்துவம், பொறியியல் படிப்புக ளுக்கான நுழைவுத்தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஏராளமான மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், நாடு முழுவதி லும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவ்வாறு ‘நீட்’ பயிற்சி மையம் ஒன்றில் பயின்றுவந்த பீகார் மாநி லத்தைச் சேர்ந்த அங்குஷ் ஆனந்த் (வயது 18), உஜ்வல் குமார் (17) என்ற இரு மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த அறைகளில் கடந்த 11 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். மற்றொரு சம்பவத்தில், மத்தியப்பிரதேச மாநி லத்தைச் சேர்ந்த பிரணவ் வர்மா (17) என்ற மாணவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணை யம், ராஜஸ்தான் மாநில அரசுக்கும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. பொதுவாக நாடு முழுவதும் பெருந் தொற்றுக்குப் பிந்தைய காலங்களில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாணவர்கள் தற்கொலையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரி விக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 1. 70 லட்சம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரி விக்கின்றன. போட்டி நிறைந்த கற்றல் முறை, பெற்றோரின் எதிர்பார்ப்பு, சமூக அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்தியா வில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள் கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த தற்கொலை விகிதம் அதிகரித்து வருவதற்கு ஒன்றிய அரசின் நடவடிக்கைகளும் காரணம்.
தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு மாணவி அனிதா தொடங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மாணவ- மாணவியர் நீட் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை ஒன்றிய பாஜக அரசு புகுத்திய பிறகு, அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ் மொழியில் படித்தவர்கள், கிராமப்புற மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இவர்களால் மற்றவர்களுடன் சேர்ந்து போட்டி போட இயலவில்லை. நீட் தேர்வு அமல் படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார்கள். நீட் தேர்வுக்கு முன்பு சராசரியாக 20 - 60 சதவீத மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். இந்த மிகப்பெரிய வீழ்ச்சிக்கு காரணம் நீட் தான். எனவே மாணவர்களின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த நீட் தேர்வை ரத்து செய்வதே சரியான தீர்வாக இருக்கமுடியும்.