headlines

img

பதற்றப்படுவது ஏன்?

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் நிச்சயம் 3ஆவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்பார் என்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள். தேர்தலில் வெற்றி நிச்சயம் என்றால் ஒவ்வொரு மாநி லத்திலேயும் ஏன் ஆள்பிடிக்கவேண்டும்? உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே சுமூகமான முறையில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. மற்ற மாநிலங்க ளில் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவை எல்லாம் ஆளும் பாஜகவை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே தான் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கூட்டணிக்காக ஆள் தேடி அக்கட்சி அலைந்து கொண்டி ருக்கிறது.

தமிழகத்தில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த சிறிய கட்சிகள்கூட விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்துள்ளன. இதனால்  பதற்ற மடைந்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்கள்- கடந்த 5 ஆண்டுகளாக சமையல் எரிவாயு விலையை குறைக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்த வர்கள்- இப்போது ஒப்புக்கு குறைத்துள்ளனர். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் ரஷ்யாவிடமிருந்து மலி வான விலையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்த போதிலும் ஆட்சியாளர்கள் விலையை குறைக்க மறுத்தார்கள். பழையபடி  மானியத்தை வழங்க வேண்டியது தானே  என்று கேட்டபோது மானியம் மக்களை சோம் பேறியாக்கிவிடும் என்று  கேலி பேசினர். 

இப்போது பாஜகவை  தேர்தல் தோல்வி பயம் ஆட்டுவிப்பதால் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைத் துள்ளனர். இந்த அறிவிப்பு மோசடித்தனமானது மட்டுமல்ல, தேர்தலுக்காகவே இந்த விலை குறைப்பு என்பதை பொதுமக்கள் நன்கறிவர். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கஷ்டப் படுவது ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக பிரதமருக்கு இப்போதுதான் தெரிகிறதா? 

2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவி யேற்றபோது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ரூ.106 டாலராக இருந்தது. அப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410 மட்டுமே. ஆனால், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை 86 டாலராக குறைந் துள்ள நிலையிலும், சமையல் எரிவாயு விலையை ரூ.1000க்கு மேலே உயர்த்தி கொள் ளையடித்ததை மக்கள் மறந்துவிட மாட்டார் கள்.  மக்கள் நலனில் மோடி அரசுக்கு உண்மை யான அக்கறை இருக்குமானால் கடந்த டிசம்பர் மாதம்  நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலின் போது பாஜக அளித்த தேர்தல்  வாக்குறுதிப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 500 ரூபாயாக குறைக்க வேண்டும்.